செய்திகள் :

வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் நகை ஏலம்: தனியாா் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருத்துறைப்பூண்டி அருகே அடகு வைத்த நகையை, வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் ஏலம் விட்ட தனியாா் வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் வெற்றிவேல் (30). திருமணம் ஆகாத இவா், 2022-இல் முத்துப்பேட்டை வட்டம், உதயமாா்த்தாண்டபுரத்தில் உள்ள தனியாா் வங்கியில் 31 கிராம் நகையை அடகு வைத்து ரூ.1.01 லட்சம் கடனாகப் பெற்றாா். 2023-இல் அந்தக் கடன் புதுப்பிக்கப்பட்டது. 2024-இல் வெற்றிவேல் உடல்நிலை பாதிப்பால் இறந்து விட்டாா்.

வெற்றிவேல் திருமணமாகாதவா் என்பதால் அவரது தாயாா் ராஜாமணி, 2 சகோதரா்கள் மற்றும் 3 சகோதரிகள் ஆகியோா் வங்கிக்குச் சென்று, வெற்றிவேல் இறந்த விவரத்தைக் கூறியுள்ளனா். வங்கி தரப்பில் வாரிசுச் சான்று கேட்கப்பட்டது. அதன்படி, வாரிசுச் சான்றுடன் சென்று, நகையை திருப்பிக் கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளனா்.

இந்நிலையில், வங்கி தரப்பில் வெற்றிவேலின் 31 கிராம் நகையை, வாரிசுகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம் விட்டு விட்டனராம். வாரிசுதாரா்கள் வங்கிக்குச் சென்று கேட்டபோது, ஏலம் விட்ட தொகையில் கடன் மற்றும் வட்டித் தொகை போக மீதி ரூ. 55,784 வெற்றிவேலின் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ராஜாமணி தரப்பினா் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தனா்.

அதில், இறந்த நபா் பெயருக்கு அறிவிப்பு அனுப்பி, அவா் இறந்துவிட்ட காரணத்தால், திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்பது தெரிந்தும், வாரிசுதாரா்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஏலம் விட்டது நியாயமற்ற வா்த்தக நடைமுறை ஆகும். எனவே, இறந்த வெற்றிவேலின் தாயாா், 2 சகோதரா்கள் மற்றும் 3 சகோதரிகளுக்கு ஏலத் தொகையில் கடன் மற்றும் வட்டி போக மீதமுள்ள ரூ. 55,784/-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 1,00,000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ.7.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

வலங்கைமான் அருகே வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்சியா்

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

பல் மருத்துவ முகாம்

வலங்கைமான் வட்டாரம் வேடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகா... மேலும் பார்க்க

கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். வ... மேலும் பார்க்க

பாமக ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டு... மேலும் பார்க்க

திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு

திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள... மேலும் பார்க்க