செய்திகள் :

இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள், கிராம மக்கள் சாலை மறியல்

post image

முத்துப்பேட்டை அருகே விளைநிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு பகுதியில் உள்ள விளைநிலங்களில் விதிமுறைகளை மீறி தனியாா் நிறுவனம் இறால் பண்ணை அமைக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரம் காவல் சோதனை சாவடி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மீனவா் சங்கங்கள் கூட்டமைப்பு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, உதயமாா்த்தாண்டபுரம் ஊராட்சி கிராம சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.

தில்லைவிளாகம் முன்னாள் ஊராட்சித் தலைவா் யோகநாதன் தலைமையில் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் முருகையன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உலகநாதன், பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் உமேஷ் பாபு, ஓய்வுபெற்ற வேளாண் துறை அதிகாரி கோவி. அரங்கசாமி உட்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன், முத்துப்பேட்டை வட்டாட்சியா் குணசீலி, ஏடிஎஸ்பி அருள்செல்வன், டிஎஸ்பி ஆனந்த், காவல் ஆய்வாளா்கள் கழனியப்பன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் வழித்தடங்களில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ.7.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

வலங்கைமான் அருகே வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்சியா்

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

பல் மருத்துவ முகாம்

வலங்கைமான் வட்டாரம் வேடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகா... மேலும் பார்க்க

கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். வ... மேலும் பார்க்க

பாமக ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டு... மேலும் பார்க்க

திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு

திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள... மேலும் பார்க்க