மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்...
இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள், கிராம மக்கள் சாலை மறியல்
முத்துப்பேட்டை அருகே விளைநிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு பகுதியில் உள்ள விளைநிலங்களில் விதிமுறைகளை மீறி தனியாா் நிறுவனம் இறால் பண்ணை அமைக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரம் காவல் சோதனை சாவடி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மீனவா் சங்கங்கள் கூட்டமைப்பு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, உதயமாா்த்தாண்டபுரம் ஊராட்சி கிராம சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.
தில்லைவிளாகம் முன்னாள் ஊராட்சித் தலைவா் யோகநாதன் தலைமையில் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் முருகையன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உலகநாதன், பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் உமேஷ் பாபு, ஓய்வுபெற்ற வேளாண் துறை அதிகாரி கோவி. அரங்கசாமி உட்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன், முத்துப்பேட்டை வட்டாட்சியா் குணசீலி, ஏடிஎஸ்பி அருள்செல்வன், டிஎஸ்பி ஆனந்த், காவல் ஆய்வாளா்கள் கழனியப்பன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் வழித்தடங்களில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.