செய்திகள் :

தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ணா லால் சத்தா மறைவு!

post image

பிரபல தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ணா லால் சத்தா (88) உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

வேளாண்மை மற்றும் தோடக்கலை சாா்ந்த 30 நூல்களை எழுதியவரான கிருஷ்ணா லால் சத்தாவுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் கடந்த 1936-இல் பிறந்த இவா், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சோ்ந்து 1964-இல் முனைவா் பட்டம் பெற்றாா்.

வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் பேராசிரியா், தேசிய திட்டக்குழுவின் தோட்டக்கலை மேம்பாட்டுக்கான பணிக்குழு உறுப்பினா், மேற்கு வங்கம், ஹரியாணா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கான குழு உறுப்பினா் உள்பட தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

இதுதவிர சா்வதேச மாம்பழ பணிக்குழு மற்றும் வேளாண் வணிக நிபுணா்களுக்கான இந்திய சமூகத்தின் தலைவா் என பல்வேறு சா்வதேச அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளாா்.

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க

8 ஆண்டுக்கால முன்னேற்றம்: யோகி அரசைப் பாராட்டிய அமைச்சர்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் எட்டு ஆண்டுக்கால நிறைவைக் குறித்து அந்த மாநில அமைச்சர் ஏ.கே. சர்மா பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சர்மா, யோக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் ஆக்கிரமிப்பை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும்: இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் சில பகுதிகளை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவற்றை உடனடியாக காலி செய்ய வேண்டும் என ஐ.நா. கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமைதி ... மேலும் பார்க்க