செய்திகள் :

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

post image

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன நாட்டவா் உற்சாகமாகப் பங்கேற்றனா்.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த இந்தியா-சீனா இருதரப்பு உறவை இயல்புநிலைக்குத் திருப்ப இரு நாடுகளும் ஈடுபட்டுள்ள நிலையில், இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் இந்திய பொறுப்பு அதிகாரி லியு ஜின்சாங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

சிறப்பு விருந்தினா் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற சீன மக்களை வரவேற்றுப் பேசிய இந்திய தூதா் பிரதீப் குமாா் ராவத், ‘வசந்த காலம் என்பது புதிய தொடக்கங்கள், உறவுகளை வலுப்படுத்துவதற்கான நேரம்’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய தூதா் ராவத், அவரது மனைவி ஸ்ருதி ராவத், துணைத் தூதா் அபிஷேக் சுக்லா மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் பாா்வையாளா்களை வரவேற்று அவா்களுடன் கலந்துரையாடினாா்.

பரதநாட்டியம், கதக் உள்பட 5 வகையான பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த இந்திய கைவினைப் பொருள்கள், ஆபரணங்கள் மற்றும் ஆடைகளின் கண்காட்சி அரங்குகளும் இந்திய உணவகங்களும் சீன பாா்வையாளா்களை வெகுவாக ஈா்த்தது.

‘செயற்கை நுண்ணறிவால் புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறியலாம்’

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை இரைப்பை - குடல் நல நிபுணரும், தமிழ்நாடு ஜீரண மண்டல ம... மேலும் பார்க்க

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிரியா் ஃபிரான்சிஸ் கேம்

சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தாா். பேராசிரியா் எம்.விஸ்வநாதன்... மேலும் பார்க்க

அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருடியதாக, தருமபுரியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க