செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை: அண்ணாமலை

post image

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்று நடைபெறும் கூட்டம் வெறும் நாடகம் மட்டும் தான். கேரளத்துக்கு சென்ற முதல்வர் தமிழ்நாடு பிரசனைக்கு குறித்து ஒரு முறை கூட பேசவில்லை. தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் கற்பனை நாடகத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவேன் எனக் கூறிய டிகே சிவகுமாருக்கு இதுவரை முதல்வர் பதில் கூட சொல்லவில்லை. தமிழக அரசின் உரிமையை முதலமைச்சர் கோட்டை விட்டுள்ளார். தமிழகத்துக்கு தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை. தற்போது உள்ள தொகுதி தான் அப்படியே இருக்க போகிறது.

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

உத்திரப் பிரதேசத்திலும் தொகுதிகள் அப்படியே இருக்கப் போகிறது. கேரளம், கர்நாடகம் தலைவர்களிடம் தமிழகத்தின் பிரச்னைகளை முதல்வர் பேச வேண்டும். நாடகமாக இந்த கூட்டம் நடைபெற்றாலும் முதல்வர் தமிழகத்தின் உரிமைகளை பேசுவதற்கு இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.

டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உழுக்க கூடிய ஒரு ஊழலாக இருக்கும், தமிழக அரசியலைப் புரட்டிப் போடும். டாஸ்மாக்கில் இன்று நிர்ணய விலையில் சரக்கு கிடைக்கிறது என்று சொன்னால் அதற்கு பாஜக தான் காரணம், இதனை நான் பெருமையாக சொல்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

மதுரை தனக்கன்குளத்தில் ரெளடி காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடியான காளீஸ்வரன் மீது கொ... மேலும் பார்க்க

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும் தொழில்முனைவோரை உ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

மாநிலங்கள் உதய தினத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநா் மாளிகையில் நடத்தினால் மட்டும் போதாது, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். சென்னை, கிண்டி ... மேலும் பார்க்க

கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்

கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளா்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 202... மேலும் பார்க்க