``என்னுடைய சொந்த பணத்தை தருவேன்'' - சுனிதா வில்லியம்ஸ் குறித்த கேள்விக்கு ட்ரம்ப...
தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை: அண்ணாமலை
தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்று நடைபெறும் கூட்டம் வெறும் நாடகம் மட்டும் தான். கேரளத்துக்கு சென்ற முதல்வர் தமிழ்நாடு பிரசனைக்கு குறித்து ஒரு முறை கூட பேசவில்லை. தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் கற்பனை நாடகத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர்.
மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவேன் எனக் கூறிய டிகே சிவகுமாருக்கு இதுவரை முதல்வர் பதில் கூட சொல்லவில்லை. தமிழக அரசின் உரிமையை முதலமைச்சர் கோட்டை விட்டுள்ளார். தமிழகத்துக்கு தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை. தற்போது உள்ள தொகுதி தான் அப்படியே இருக்க போகிறது.
யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
உத்திரப் பிரதேசத்திலும் தொகுதிகள் அப்படியே இருக்கப் போகிறது. கேரளம், கர்நாடகம் தலைவர்களிடம் தமிழகத்தின் பிரச்னைகளை முதல்வர் பேச வேண்டும். நாடகமாக இந்த கூட்டம் நடைபெற்றாலும் முதல்வர் தமிழகத்தின் உரிமைகளை பேசுவதற்கு இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.
டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உழுக்க கூடிய ஒரு ஊழலாக இருக்கும், தமிழக அரசியலைப் புரட்டிப் போடும். டாஸ்மாக்கில் இன்று நிர்ணய விலையில் சரக்கு கிடைக்கிறது என்று சொன்னால் அதற்கு பாஜக தான் காரணம், இதனை நான் பெருமையாக சொல்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.