செய்திகள் :

பிரிந்து சென்ற லிவ் இன் பார்ட்னரைக் கடத்தி ரூ.12 கோடி கேட்ட பெண்

post image

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் நிகில் பார்மர் (32). ஐ.ஐ.எம். பட்டதாரியான நிகில் நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வரை பிரீத்தி என்ற பெண்ணுடன் நான்கு ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்தார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இதையடுத்து தனது பிஸ்னஸ் பார்ட்னர் கபில் ரஜபுத் என்பவருடன் சேர்ந்துகொண்டு, நிகிலைக் கடத்தி வைத்து, அவரது தந்தை ரஜினிகாந்த்தை மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்டார் பிரீத்தி. இதற்காக, நிகிலிடம், "பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து கைது செய்ய வைத்துவிடுவேன்" என்று பிரீத்தி கூறி இருக்கிறார். அதோடு, தான் சொல்லும் இடத்திற்கு வரும்படி கூறி நிகிலை மிரட்டி மும்பைக்கு அழைத்து வந்துள்ளார். கடந்த மாதம் மும்பைக்கு அழைத்து வந்து நவிமும்பையில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்துள்ளார்.

அதோடு உன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருப்பதால் உன்னை போலீஸார் தேடுவதாகவும், வெளியில் சென்றால் போலீஸார் கைது செய்துவிடுவார்கள் என்று கூறி நிகிலைப் பிரீத்தி மிரட்டி வைத்திருந்தார். மேலும் பாதுகாப்பான முறையில் வீட்டுக்குச் செல்லவேண்டுமானால் உனது தந்தைக்கு போன் செய்து ரூ.12 கோடி கொடுக்கச் சொல்லும்படி கேட்டனர். உடனே நிகிலும் தனது தந்தைக்கு போன் செய்து பேசினார். முதல் தவணையாக நிகிலின் தந்தை கடந்த மாதம் 28ம் தேதி ரூ.70 லட்சத்தைக் கொடுத்தார். அதன் பிறகு மார்ச் 5ம் தேதி மேலும் 80 லட்சத்தைக் கொடுத்தார். அப்படி இருந்தும் தாங்கள் கேட்ட முழு பணத்தையும் கொடுக்கும்படி பிரீத்தியும் அவரது ஆட்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் தனது மகனைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டார். இதையடுத்து நிகிலைப் பார்க்க மும்பைக்கு வரும்படி ரஜினிகாந்த்திடம் கேட்டுக்கொண்டனர். அதன் படி ரஜினிகாந்த் மும்பை வந்தார். ஆனால் வந்த பிறகு பாக்கி பணத்தைக் கொடுத்தால்தான் பார்க்க அனுமதிப்போம் என்று கூறி, நிகிலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரஜினிகாந்த் இது குறித்து தனது நண்பரிடம் கலந்து ஆலோசித்தார். அவரின் ஆலோசனைப்படி இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

உடனே போலீஸார் கேட்டுக்கொண்டபடி பணம் கொடுப்பதாகக் கூறி, அக்கும்பலை வரவழைத்தார் ரஜினிகாந்த். அக்கும்பலைச் சேர்ந்த போலே என்பவர் வதோதராவிற்கு வந்தபோது போலீஸார் பணம் வாங்க வந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த நபரிடம் விசாரணை நடத்தி நிகில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து குஜராத் போலீஸார் மும்பைக்கு வந்து மும்பை போலீஸாரின் துணையோடு நவிமும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தி, நிகிலைக் கைது செய்தனர். பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் முக்கிய குற்றவாளியான பிரீத்தி தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரீத்தியின் முன்னாள் காதலன் ஆவார். போலீஸார் சோதனை நடத்தியபோது வீட்டில் வாஷிங் மெஷினிற்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது ஒரு துணி போடப்பட்டு இருந்தது. கைதானவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்தனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ள... மேலும் பார்க்க

காட்பாடி: கழுத்தில் 6 அடி நீள பாம்புடன் யாசகம் கேட்ட கும்பல்; பீதியில் ஓட்டமெடுத்த மக்கள்!

`பீதியைக் கிளப்பாம போங்க..’வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு பெண் உள்ளிட்ட நான்கு பேர் 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும், தோள் மீ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ச... மேலும் பார்க்க

சம்பள பிரச்னை, தொழிலாளர்கள் மீது கோபம்... பஸ்சிற்கு தீவைத்தவிட்டு நாடகமாடிய ஓட்டுநர்; நடந்தது என்ன?

புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹின்சேவாடி பகுதியில் தனியார் கம்பெனி தொழிலாளர்களை கம்பெனிக்கு ஏற்றிச்சென்ற மினி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்தில் பஸ்சின் பின் கதவு திறக்காமல் ... மேலும் பார்க்க

சென்னை: துப்பாக்கியால் சுட்டு ரௌடியைப் பிடித்த போலீஸ் - யார் இந்த ஐகோர்ட் மகாராஜா?

சென்னை வேளச்சேரி தரமணி இணைப்பு சாலையில் கடந்த 14-ம் தேதி வேளச்சேரி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த வினோத் (27), சென்னை மணலியைச் ச... மேலும் பார்க்க

காரைக்குடி: நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு சென்ற ரெளடி - போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயெ வெட்டிக்கொலை

நிபந்தனை ஜாமீனில் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வெளியே வந்த ரெளடியை, ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Murder (representational image)காரைக்குடி சேர்வார் ஊர... மேலும் பார்க்க