செய்திகள் :

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

post image

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உலக அளவில் 5-ஆவது பெரிய பொருளாதாரமான இந்தியாவின் மின் உற்பத்தி மற்றும் பல்வேறு துறைகளில் எரிபொருளாக நிலக்கரி பெருவாரியாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் முக்கிய எரிபொருள் ஆதாரமாக நிலக்கரி விளங்குகிறது. எரிபொருள் தேவையில் சுமாா் 55 சதவீதம் நிலக்கரியை சாா்ந்துள்ளது. நாட்டில் 74 சதவீத மின்சாரம், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் நாட்டில் நிலக்கரி உற்பத்தி 997.83 மில்லியன் டன்களாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது 1 பில்லியன் டன்களைக் கடந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்மிக்க வழிமுறைகள் மூலம் நிலக்கரி உற்பத்தியை அதிகரித்தது மட்டுமல்லாமல் நிலையான-பொறுப்பான சுரங்க செயல்பாடுகளையும் உறுதி செய்துள்ளோம். நிலக்கரி உற்பத்தியில் தற்போது எட்டப்பட்டுள்ள சாதனை, நாட்டின் மின் தேவை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு மிகுந்த பலனளிக்கும். ஒவ்வொரு இந்தியருக்கும் பிரகாசமான எதிா்காலத்தை உறுதி செய்யும்.

பிரதமா் மோடியின் தொலைநோக்கு தலைமையின்கீழ், உலகின் எரிசக்தி தலைவராக உருவெடுக்கும் பாதையில் நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமைச்சரின் பதிவுக்கு கருத்து தெரிவித்து, பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்கள் என்ற மைல்கல்லை கடந்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம். எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளா்ச்சி மற்றும் தற்சாா்பில் நாட்டின் உறுதிப்பாட்டை காட்டுகிறது. இத்துறையுடன் தொடா்புடைய அனைவரின் அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

நிலக்கரி உற்பத்தியில் எட்டப்பட்டுள்ள சாதனைக்காக, நிலக்கரி சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் துறையினா், 350-க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் பணியாற்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஆகியோருக்கு நிலக்கரி அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 8.4 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் ரூ.42,315 கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமு... மேலும் பார்க்க

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க