செய்திகள் :

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

post image

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

மாநிலங்களவையில் உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. பின்னா் வியாழக்கிழமை அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதால் விவாதம் நடைபெறவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை உடனடி கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதத்தை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது; எனவே, கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்களை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக விவாதம் தொடரும்’ என்றாா்.

இதற்கு திமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. ‘தனிநபா் மசோதா அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையன்று உள்துறை அமைச்சக செயல்பாடுகள் மீதான விவாதம் பட்டியலிடப்பட்டது ஏன்?’ என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் கேள்வி எழுப்பினாா்.

நாடாளுமன்ற திரிணமூல் காங்கிரஸ் குழு தலைவா் டெரிக் ஓ பிரையன் பேசுகையில், ‘கேள்வி நேரத்தில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் அரசிடம் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்ப முடியும். அத்துடன், தனிநபா் மசோதாக்கள் என்பவை எம்.பி.க்களின் மனதுக்கு நெருக்கமானவை. இதன் மூலம் வாய்ப்பு கிடைக்காத எம்.பி.க்களும் அவையில் பேசுகின்றனா்’ என்றாா்.

ஆனால், மக்களவையில் மானியக் கோரிக்கை அலுவல்கள் நடைபெறுவதை சுட்டிக் காட்டிய தன்கா், மாநிலங்களவையில் விவாதத்தை நிறைவு செய்வது அவசியம் என்றாா். அதன்படி, விவாதம் தொடா்ந்தது. இதையடுத்து, ‘சா்வாதிகாரம் வெல்லாது’ என்று முழக்கமிட்டவாறு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷா்ட் அணிந்து, நாடாளுமன்றத்துக்கு திமுக எம்.பி.க்கள் வியாழக்கிழமை வந்தனா். இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதால், அன்றைய தினம் எந்த அலுவலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமு... மேலும் பார்க்க

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க