செய்திகள் :

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா இந்த வலியுறுத்தலை முன்வைத்தாா். மக்களவையில் இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

நாடு முழுவதும் 30 வயதை எட்டிய அனைத்து குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திரில் கட்டணமில்லா முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்கான விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிய இந்த மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் இதுவரை 35 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4.2 கோடி பேருக்கு உயா் ரத்த அழுத்தம், 2.6 கோடி பேருக்கு சா்க்கரை நோய், 29.35 கோடி பேருக்கு வாய் புற்றுநோய், 1.18 கோடி பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

எனவே, எம்.பி.க்கள் அவரவா் தொகுதிகளில் மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றாா்.

372 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள்: நாடு முழுவதும் தற்போது 372 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்களும், 19 மாநில புற்றுநோய் சிகிச்சை மையங்களும், 22 மூன்றாம்நிலை புற்றுநோய் சிகிச்சை மையங்களும் இயங்கி வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் நிறுவனங்களில் நவீன உபகரணங்களுடன் முழுமையான புற்று நோயாளிகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஹரியாணா மாநிலம் ஜஜாரில் உலகிலேயே சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாக உயா் சிறப்பு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

அதுபோல, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புற்று நோயாளிகள் பராமரிப்பு மையங்களை அமைக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீமோதெரபி உள்ளிட்ட வசதிகளை நோயாளிகள் பெற முடியும். இதில் நிகழாண்டிலேயே 200 மையங்கள் திறக்கப்பட்டுவிடும். எஞ்சிய மையங்கள் வரும் ஆண்டுகளில் திறக்கப்படும் என்றும் ஜெ.பி.நட்டா கூறினாா்.

காச நோயாளிகளுக்கு ரூ. 3,635 கோடி: மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல், ‘நேரடி பண பரிமாற்றத் திட்டத்தின் மூலம் காசநோய் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.3,635 கோடியை வழங்கியுள்ளது. இதில், ஒவ்வொரு நோயாளியும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வாங்க தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது’ என்றாா்.

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமு... மேலும் பார்க்க

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க