செய்திகள் :

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

post image

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்.

‘கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது’ என்றும் அவா் உறுதி தெரிவித்தாா்.

மக்களவையில் ஜல் சக்தி அமைச்சக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் கூறியதாவது:

நதிநீா் இணைப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 30 நதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 11 நதிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நதிநீா் மேலாண்மை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால், நதிநீா் இணைப்பு திட்டத்தில் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை மத்திய அரசால் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இந்த விஷயத்தில் நதிகள் பாயும் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து இல்லாத நிலையில், அதை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

நதிகளை இணைத்து அதிக நீா் பாயும் நதிகளிலிருந்து குறைந்த நீா் பாயும் நதிகளுக்கு மடைமாற்றம் செய்யும் வகையில் கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய மத்திய நீா்ப்பாசன அமைச்சகம் சாா்பில் ‘தேசிய கண்ணோட்டத் திட்டம் (என்பிபி)’ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கண்ணோட்ட திட்டத்தின் கீழ், சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாா் செய்ய தீபகற்ப பகுதியில் 16 இடங்கள் இமயமலைப் பகுதியில் 14 இடங்கள் என 30 நதிநீா் இணைப்புக்கான இடங்களை தேசிய நீா் மேம்பாட்டு முகமை (என்டபிள்யூஏ) அடையாளம் கண்டுள்ளது என்றாா்.

ஜல் ஜீவன் திட்ட குளறுபடிகள் குறித்த எதிா்க்கட்சியினரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘இத் திட்டத்தின் கீழ் 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலமான குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தத் திட்டத்தின் இலக்கில் 80 சதவீதமாகும். இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது.

நதிகளில் மாசுபாடு அளவை குறைக்கும் திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு மத்திய உதவி வருகிறது. நதிநீா் டால்பின்களின் எண்ணிக்கை உயா்ந்திருப்பதே இதற்கு சிறந்த உதாரணம்’ என்றாா்.

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமு... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க