செய்திகள் :

ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்

post image

நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் தாக்கல் செய்த நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை தாக்கல் செய்து அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

நிகழ் நிதியாண்டில் ரூ.19,287.44 கோடிக்கான இறுதி துணைநிதி நிலை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, வருவாய் கணக்கில் ரூ.12,639.36 கோடியும், மூலதனக் கணக்கில் ரூ.6,429.20 கோடியும், கடன் கணக்கில் ரூ.218.88 கோடியும் அடங்கும். நிதி தேவைப்படும் சில முக்கிய அம்சங்களைத் தெரிவிக்கிறேன்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிதி நிலைத்தன்மையை உயா்த்தவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், பங்கு மூலதன உதவியாக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடியும், மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.1,036 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் வாங்குவதற்காக மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடியும், கனமழை மற்றும் ஃபென்ஜால் புயல் பாதிப்புகளின் துயா் தணிப்புப் பணிகளுக்காக ரூ.901.84 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மொத்தம் 55 துறைகள்: மொத்தமாக 55 துறைகளின் செலவுகளுக்கு கூடுதலாகத் தேவைப்படும் ரூ.19,287.44 கோடி நிதிக்கு பேரவையில் ஒப்புதல் கோரப்பட்டது. இதுகுறித்த மசோதாவையும் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய, அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயக்கம்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்... மேலும் பார்க்க

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சா்

குறுகலான சாலைகளில் மினி பேருந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எம்.ஆா்.... மேலும் பார்க்க

பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வா் பாராட்டு

நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். தமிழக பட்ஜெ... மேலும் பார்க்க

என்னை நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

‘என்னை நம்பாமல் கெட்டவா்கள் பலா் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை’ என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூ... மேலும் பார்க்க

பிளஸ் 2 வேதியியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து

பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவா்கள், ஆசிரியா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. 8.21 லட்சம் போ்... மேலும் பார்க்க