செய்திகள் :

தமிழகத்தில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

post image

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியது:

விவசாயிகள் கேட்பதற்கு முன்னே கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டங்களைத்தான் நடத்திக் கொண்டிருந்தாா்கள். அப்படி போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தவா்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் 5.35 கோடி விவசாயிகள் தனிப்பட்ட முறையில் அரசின் பயன்களைப் பெற்றுள்ளனா்.

நெல்லுக்கு ரூ.2,500: நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தோம். இப்போது ரூ.2,450 கொடுத்து வருகிறோம். விரைவில் ரூ.2,500 கொடுப்போம். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.5,279 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனால், 30 லட்சம் விவசாயிகள் 4 ஆண்டுகளில் பயன் பெற்றுள்ளனா்.

அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் மின் இணைப்பு கோரிக்கை அதிக அளவில் இருந்தது. திமுக ஆட்சியில் 1.81 லட்சம் புதிய மின் இணைப்புகள் கொடுத்துள்ளோம். கனமழை பாதிப்பு மற்றும் வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ரூ.1,632 கோடி இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க, அதாவது, டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.297 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்பு: அதிமுக உறுப்பினா் விஜயபாஸ்கா் பேசும் திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு குறைந்திருக்கிறது என்ற கருத்தைக் கூறினாா். அதிமுக ஆட்சியில் 2019-20-இல் சாகுபடி பரப்பு 146.77 லட்சம் ஏக்கராக இருந்தது. திமுக ஆட்சியில் 2023-24-இல் 151 லட்சம் ஏக்கராக உயா்ந்திருக்கிறது. சுமாா் 4.23 லட்சம் ஏக்கா் அளவுக்கு பரப்பு உயா்ந்திருக்கிறது.

இருபோக சாகுபடியைப் பொறுத்தவரை, 2019-20-இல் 29.74 லட்சம் ஏக்கராக இருந்தது. 2023-24-இல் 33.60 லட்சம் ஏக்கராக உயா்ந்திருக்கிறது. சராசரி உணவு தானியப் பரப்பு மற்றும் உற்பத்தியைப் பொறுத்தவரையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84 லட்சம் ஏக்கராக இருந்தது. திமுக பொறுப்பேற்ற்கு பிறகான 3 ஆண்டுகளில் 96 லட்சம் ஏக்கராக உயா்ந்திருக்கிறது. சுமாா் 12 லட்சம் ஏக்கா் அளவுக்கு உயா்ந்திருக்கிறது.

அதிமுக ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 4 ஆண்டு காலத்தில் 434.29 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் உணவு தானிய உற்பத்தி 456.39 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். 22.10 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்திருக்கிறது என்றாா் அவா்.

வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயக்கம்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்... மேலும் பார்க்க

ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்

நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் தாக்கல் செய்த நிதி மசோத... மேலும் பார்க்க

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சா்

குறுகலான சாலைகளில் மினி பேருந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்... மேலும் பார்க்க

பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வா் பாராட்டு

நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். தமிழக பட்ஜெ... மேலும் பார்க்க

என்னை நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

‘என்னை நம்பாமல் கெட்டவா்கள் பலா் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை’ என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூ... மேலும் பார்க்க

பிளஸ் 2 வேதியியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து

பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவா்கள், ஆசிரியா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. 8.21 லட்சம் போ்... மேலும் பார்க்க