செய்திகள் :

பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வா் பாராட்டு

post image

நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தமிழக பட்ஜெட் மீது பேரவையில் நடந்த பொது விவாதங்களுக்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, வெள்ளிக்கிழமை பேரவையில் பதில் அளித்தாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

ரூ. 2,000 கோடியில் அனைத்து மாணவா்களுக்கும் தரமான மடிக்கணினி வழங்க முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறாா் அமைச்சா் தங்கம் தென்னரசு. முன்னாள் முதல்வா் கருணாநிதி வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.

யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத எந்தத் துறையையும் விட்டுவிடாத அனைவருக்குமான பட்ஜெட்டை அளித்து, பதிலுரையிலும் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாா் என்று முதல்வா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள்: அன்புமணி

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6,597 படுகொலைகள் சம்பவங்கள் நடந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் த... மேலும் பார்க்க

மதுரை ரெளடி கொலை: 2 தனிப்படைகள் அமைப்பு!

மதுரை ரெளடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடி காளீஸ்வரன், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்தபோது 3 பைக்களில் வ... மேலும் பார்க்க

நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

மதுரை தனக்கன்குளத்தில் ரெளடி காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடியான காளீஸ்வரன் மீது கொ... மேலும் பார்க்க

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும் தொழில்முனைவோரை உ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க