செய்திகள் :

ஆர்ஜென்டீனா முன்னாள் அதிபர் மீது அமெரிக்கா தடை!

post image

ஆர்ஜென்டீனா முன்னாள் அதிபர் மீது அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய ஆர்ஜென்டீனா நாட்டின் முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டஸ் அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அவரது அமைச்சரான ஜூலியோ மிகுவேல் டி விட்டோ மற்றும் அவர்கள் இருவரது குடும்பத்தினர்களுக்கும் இந்த பயணத் தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்கவைச் சேர்ந்த ஆர்ஜென்டீனா நாட்டின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை குற்றவாளியென தீர்ப்பளித்து அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

இதையும் படிக்க:நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!

இதுகுறித்து அமெரிக்க அரசின் தலைமை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா மற்றும் டி விட்டோ ஆகிய இருவரும் தங்களது பதவியைப் பயன்படுத்தி பொதுப் பணித்துறை ஒப்பந்தங்களின் மூலம் ஊழலில் ஈடுபட்டதாகவும் இதனால் ஆர்ஜென்டீனா அரசுக்கு சேர வேண்டிய பல மில்லியன் டாலர் அளவிலான பணம் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை பல்வேறு நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளதை குறிப்பிட்டு பேசிய அவர் தங்களது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு சர்வதேச அளவிலான ஊழலைக் கட்டுப்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஆர்ஜென்டீனா நீதிமன்றத்தில் கடந்த 2024 நவம்பரில் மேல் முறையீடு செய்தார்.

ஆனால், அங்கு அவரது சிறைத் தண்டனையை உறுதி செய்யப்பட்டு மீண்டும் அதிபர் பதவியிக்கு போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் திமுக தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்... மேலும் பார்க்க