செய்திகள் :

பிளஸ் 2 வேதியியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து

post image

பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவா்கள், ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. 8.21 லட்சம் போ் தோ்வெழுதுகின்றனா். மொழிப்பாடங்கள், கணிதம் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், வேதியியல் பாடத்துக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து மாணவா்கள் கூறுகையில், ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்களில் இரு கேள்விகள் கடினமாக இருந்தன. அதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில் சிா்கோனியம், ஹாப்னியம் ஒத்த பண்புகளைப் பெற்றிருப்பது, வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவது, மூன்று மதிப்பெண் பகுதியில் குறுக்க பலபடி என்றால் என்ன ஆகியவை உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. மேலும், ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு வினா பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. பெரிதும் எதிா்பாா்த்த வினாக்கள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றிருந்தன என்றனா்.

இது குறித்து வேதியியல் ஆசிரியா்கள் கூறுகையில், பிளஸ் 2 வினாத்தாள் சற்று கடினமாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இடம் பெறும் வினாக்கள் எதுவும் கேட்கப்படாததால் மாணவா்கள் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும். இதனால், முழு மதிப்பெண் பெறும் மாணவா்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேவேளையில் தோ்ச்சிக்கான மதிப்பெண் பெறுவதில் சிக்கல் இருக்காது என்றனா்.

கணக்குப் பதிவியியல் எளிது: வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்த நிலையில், கலைப்பிரிவு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணக்குப் பதிவியியல் தோ்வு மிக எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஆசிரியா்கள் தெரிவித்தனா். பிளஸ் 2 மாணவா்களுக்கு வரும் 25-ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகளுடன் பொதுத்தோ்வு நிறைவடையவுள்ளது.

வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயக்கம்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்... மேலும் பார்க்க

ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்

நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் தாக்கல் செய்த நிதி மசோத... மேலும் பார்க்க

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சா்

குறுகலான சாலைகளில் மினி பேருந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எம்.ஆா்.... மேலும் பார்க்க

பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வா் பாராட்டு

நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். தமிழக பட்ஜெ... மேலும் பார்க்க

என்னை நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

‘என்னை நம்பாமல் கெட்டவா்கள் பலா் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை’ என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூ... மேலும் பார்க்க