செய்திகள் :

மீண்டும் குறைந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மேலும் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840 விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கும், மார்ச் 17 ஆம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.320, புதன்கிழமை ரூ.320, தொடர்ந்து வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 66,480 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

ஏழு மலைகளும் வெங்கடேஸ்வரருக்குச் சொந்தமானது: முதல்வர் சந்திரபாபு நாயுடு

வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கு விற்பனையானது.

இந்த நிலையில்,சனிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840-க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,230-க்கு விற்பனையாகிறது.

வெள்ளிவிலை நிலவரம்

அதேபோன்று, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.110-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனையாகிறது.

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள்; அதிமுக ஆட்சியைவிட அதிகம்! - அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் படுகொலைகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனவும் பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!

பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று (மார்ச் 21) ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசின் திட்டமிட்ட தாக்குதல் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆனால் மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, மத்திய அரசின் திட்டமிட்ட நேரடி தாக்குதல்தான் இந்த தொகுதி மறுசீரமைப்பு என துணை... மேலும் பார்க்க