செய்திகள் :

நாக்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்கப்படும்: ஃபட்னவீஸ்

post image

நாக்பூர் வன்முறையால் ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்ட செலவை கலவரத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வலியுறுத்தி முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் சொந்த ஊரான மத்திய நாக்பூரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மார்ச் 17 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு அமைப்புகளுக்கு இடையிலான மோதல் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனைத் தடுக்க வந்த காவல் துறையினர் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களைத் தடியடி நடத்தி காவல் துறையினர் கலைத்தனர். இதில், காவலர்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தநிலையில் வன்முறையால் ஏற்பட்ட சேதத்தின் நஷ்ட செலவை, கலவரம் செய்தவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். ஈடுசெய்யத் தவறினால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு இழப்புகளை ஈடுகட்டப்படும் என்று அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஃப்னாவீஸ்,

கலவரத்தின் போது காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை "உளவுத்துறை தோல்வி" என்று கூற முடியாது, ஆனால் உளவுத்துறை சிறப்பாக இருந்திருக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

சிசிடிவி காட்சிகள், விடியோ பதிவுகளின் பகுப்பாய்வைத் தொடர்ந்து இதுவரை

இந்த சம்பவத்தில் மொத்தம் 105 பேர் கைதாகியுள்ளனர். இதில் 12 சிறார்கள் உள்பட 92 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30 அன்று நாக்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், வன்முறையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ஃபட்னாவிஸ் கூறினார்.

வீட்டில் நேர்ந்த வெடிவிபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

ஹரியாணா மாநிலம் பஹதூர்காரில் உள்ள வீட்டில் நேர்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநில... மேலும் பார்க்க

போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி... மேலும் பார்க்க

கைப்பற்றிய பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: தில்லி நீதிபதி வா்மா விளக்கம்

‘தீயணைப்புத் துறையினரால் எனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது; என் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு அபத்தமானது’ என்று தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா அளித... மேலும் பார்க்க

ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை

திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேஸிலின் ரியோ டி ஜென... மேலும் பார்க்க

பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் போ் பயணம்: 11% உயா்வு

கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் போ் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீத உயா்வு என விமான போக்குவரத்து இயக்குநரகத்தின... மேலும் பார்க்க