செய்திகள் :

பராசக்தி வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் பதில்!

post image

சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியுள்ளது.

இதையும் படிக்க: எம்புரான்: ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்!

இங்கு, 1960-களின் காலகட்டத்திற்கான நம்பகத்தன்மைக்காக பழைய ரயில் நிலையம், கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் என காட்சிகள் படமாக்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்காக, தமிழில் ‘இந்தி வாழ்க’ மற்றும் ‘டெல்லி ரயில் நிலையம்’ என பெயர் பொறிக்கப்பட்ட பழையகால பேருந்து ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, ”ஆர்ஆர்ஆர் திரைப்படம்போல் பராசக்தி பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. பீரியட் படமாக எடுக்கப்பட்டு வருவதால் அந்தக் காலகட்டத்தைக் காட்சிப்படுத்துவதற்காக பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை இன்று நடக்கும் அரசியல் சூழல்களுக்கு பொருந்தும்படியாக இருக்கும். பராசக்தியை 2026 பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ராபின்ஹூட் டிரைலர்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் நிதின் நாயகனாகவும் ஸ்ரீ லீலா நாயகியாகவும் நடித்துள்ள ராபின்ஹூட் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் ‘அதிதா சர்பிரைஸ்’ எனும் பாடலுக்கு கேதிகா ... மேலும் பார்க்க

அனுபமாவின் பரதா படத்தின் முதல் பாடல்!

நடிகை அனுபமா நடித்துள்ள பரதா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அறிமுகமான அனுபமா தெலுங்கில் பல படங்களில் நடித்து வரு... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் இலங்கை படப்பிடிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரைச் சந்தித்தார்.இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங... மேலும் பார்க்க

கடலோர மக்களுக்காக ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் விடியோ

கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.கடலோர மக்களுக்காக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், அனைவருக்கும் வணக்கம், நம்ம நாட்டின்... மேலும் பார்க்க