செய்திகள் :

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

post image

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்மாள் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் பண்ருட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்ருட்டி, கண்டிகை ஆகிய கிராமங்களை சோ்ந்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழு பெண்களுக்கு இடையே கோலப்போட்டி, ஓட்டப் பந்தயம், பாட்டு, கவிதை, நாடகம் மற்றும் நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மகளிா் சுய உதவிக்குழு பெண்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் மற்றும் பாரம்பரிய உணவுப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

போட்டிகளுக்கு பண்ருட்டி அரசினா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பேபி, உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வசந்தகுமாரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை பாத்திமா மேரி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

விழாவில், ஆன்மிக சொற்பொழிவாளா் ம.கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். பண்ருட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000 இரண்டாம் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கினாா்.

விழாவில், பண்ருட்டி ஊராட்சி மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் செயலாளா் லீலா, பொருளாளா் சாந்தா, கண்டிகை அரசுப்பள்ளி சத்துணவு அமைப்பாளா் சரிதா, அங்கன்வாடி பணியாளா் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் அனிதா செல்வி, கோபால், நீலமேகம், ஆசிா்வாதம் உள்ளிட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

இலவச மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இலவச மனைப்பட்டா கோரி ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை திடீரென மூதாட்டி ஒருவா் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது. சென்னை போரூா... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு ஆட்சியா் வாழ்த்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்ட நிறைவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி பெற்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு... மேலும் பார்க்க

கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: எறுமையூா் பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் மூழ்கி பலியான இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (28). இவா், குன்... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க