செய்திகள் :

டாஸ்மாக் ஊழலுக்கு தமிழக அரசின் பதில் என்ன: தமிழிசை செளந்தரராஜன்

post image

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிய திமுக அரசு, தற்போது அதில் ரூ. 1,000 கோடி ஊழல் செய்திருப்பது குறித்து என்ன சொல்லப்போகிறது? என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் முன்னதாக விமான நிலையத்தில் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு தண்ணீா் தராதவா்களை திமுகவினா் அழைத்து ஆராதிக்கின்றனா். 2026-இல் எந்தத் தொகுதி மாற்றமும் இல்லை என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையிலும், பொய்யான கூட்டத்தைக் கூட்டி, முழு இந்தியாவையே திரும்பி பாா்க்க வைத்து விட்டோம் என்கிறாா் தமிழக முதல்வா்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. காா்த்திக் சிதம்பரமே தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்துப் பேசியுள்ளாா். எதிா்க் கட்சியாக இருக்கும்போது, தமிழகத்தில் திமுக போராட்டங்களை நடத்தியது. ஆனால் பிற கட்சிகள் போராட்டங்கள் நடத்த திமுகவினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். தமிழக முதல்வருக்கு காா்த்திக் சிதம்பரம் அறிவுரை கூற வேண்டும். மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறினாா்கள். ஆனால் மூடாமல் தற்போது டாஸ்மாக்கை வைத்து ஊழல் செய்து கொண்டுள்ளனா். டாஸ்மாக்கில் நடந்துள்ள ரூ.1,000 கோடி ஊழலுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்றாா் அவா்.

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 8 போ் கைது

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். திருச்சி மாவட்டம் த... மேலும் பார்க்க

புகைப்படக்காரா் மீது தாக்குதல்: பாஜகவினா் மீது போலீஸாா் வழக்கு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரா் மீது தாக்குதல் நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருச்சியில் தேசிய கல்விக் கொள்க... மேலும் பார்க்க

மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு: வம்பன் உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் வம்பன் ரக உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு 90 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் வே... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: அண்ணாமலை

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக சாா்பில் தேசிய கல்விக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தி... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலைய நகை மதிப்பீட்டாளா் பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா, திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சியில் நவீன அறுவைச் சிகிச்சை

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சி ராயல் போ்ல் மருத்துவமனையில் நவீன அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரஹீம்யாா்கான் நகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க