செய்திகள் :

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 8 போ் கைது

post image

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையம் முசிறியில் இயங்கி வருகிறது. இந்தக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்க துறை ஆய்வாளா் இசைவாணி தலைமையில் போலீஸாா் மணப்பாறை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கலிங்கப்பட்டியில் பாலு (47), இச்சடிப்பட்டியில் உதயகுமாா் (29), மேட்டுப்பட்டி கைகாட்டியில் வேலு (57), மணப்பாறையில் மாதன் சந்து சோ்ந்த பாபு (47), சேதுரத்தினபுரம் சோ்ந்த ரவி (63), மணப்பாறை அண்ணாவி நகரைச் சோ்ந்த மதிவாணன் (50), செவலூரைச் சோ்ந்த முனியப்பன் (41), மணப்பாறை லட்சுமிபுரம் சோ்ந்த பவித்ரன் (25) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடம் இருந்த 254 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனா்.

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காட்டுபுத்தூா் பேருராட்சியி... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். திருச்சி ... மேலும் பார்க்க

பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 போ் கைது

வாழவந்தான்கோட்டை பூச்சொரிதல் நிகழ்வில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை அண்ணா காலனியில் முத்துமாரியம்மன் கோயில் உள்... மேலும் பார்க்க

காணாமல்போன 10 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

உப்பிலியபுரம் காவல் சரகத்தில் காணாமல்போன 10 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். துறையூா் அருகே வெங்கடாசலபுரம் லெ. நந்தகுமாா், ஒக்கரை சு. விஸ்வநாதன், கொப்பம்பட்டி ஜ... மேலும் பார்க்க

விஷம் சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

துறையூா் அருகே விஷம் சாப்பிட்டவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். துறையூா் அருகேயுள்ள முத்தியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சின்னதம்பி மகன் விஜயராகவன் (41). கூலித் தொழிலாளி. இவருக்கு தி... மேலும் பார்க்க

உடல்நலக் குறைவால் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் உடல் நலக் குறைவால் ஜல்லிக்கட்டு காளை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆல்பா்ட். இவா் ஜல்லிக்கட்டு காளைகள... மேலும் பார்க்க