செய்திகள் :

புகைப்படக்காரா் மீது தாக்குதல்: பாஜகவினா் மீது போலீஸாா் வழக்கு

post image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரா் மீது தாக்குதல் நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்சியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் பங்கேற்றனா். இந்தப் பொதுக்கூட்ட நிகழ்வுகளை நாளிதழ் ஒன்றின் புகைப்படக்காரராகப் பணியாற்றும், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சு. சுந்தா் (44) படம் எடுத்துக் கொண்டிருந்தாா்.

கூட்டம் குறைவாக இருந்த பகுதிகளில் அவா் படங்கள் எடுத்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா் அவரைப் படம் எடுக்கக் கூடாது எனக்கூறி தாக்கினராம். பின்னா் சக பத்திரிகையாளா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்தியதாக அடையாளம் தெரியாத பாஜகவைச் சோ்ந்த 10 போ் மீது திருச்சி கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஹெளரா விரைவு ரயிலில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஹெளரா விரைவு ரயிலில் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத... மேலும் பார்க்க

திருச்சி: ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி பாலக்கரை காவ... மேலும் பார்க்க

ஒரே வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் ரௌடிகளின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநா் மா்மச்சாவு

திருச்சியில் ரயில் பாதை அருகே அரசுப்பேருந்து நடத்துநா் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா். திருச்சி தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் த. பொன்னா் (45). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காட்டுபுத்தூா் பேருராட்சியி... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். திருச்சி ... மேலும் பார்க்க