செய்திகள் :

கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி மே மாதத்துக்குள் முடிக்கத் திட்டம்! - தெற்கு ரயில்வே தகவல்

post image

கிண்டி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ள கிண்டி ரயில்நிலையம் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கிண்டி ரயில் நிலையம் மூலம் தினமும் சுமாா் 68,000 போ் பயணிக்கின்றனா். கிண்டி ரயில் நிலையத்தைச் சுற்றிலும் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களும், தேசிய பூங்கா, காந்தி மண்டபம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், அதிக தொழிற்சாலைகளை கொண்ட தொழிற்பேட்டையும் கொண்டு விளங்குகிறது.

சென்னை நகரின் நுழைவு வாயிலாக காணப்படும் கிண்டி, ரயில் நிலையம், மெட்ரோ மற்றும் பேருந்து நிலையத்தை ஒரே பகுதியில் கொண்டுள்ளது. அதனால், நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மையப்புள்ளியாக கிண்டி ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் 200 மின்சார ரயில்களும், 98 விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கிண்டி ரயில் நிலையத்தை சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி ரூ.13.50 கோடியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ரயில் நிலையத்தின் இருபுறமும் பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் முகப்பு பகுதி மேம்படுத்தப்படும்.

ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

பாதசாரிகள் செல்வதற்கான பிரத்யேக பகுதி, பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் நடைமேடை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது வாகன நிறுத்தம், 3 மின்தூக்கி, கூரை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கழிப்பறை கட்டடம், முகப்பு பகுதி அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அனைத்துப் பணிகளைம் மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க