செய்திகள் :

செய்யாற்றுப் படுகையில் தொடரும் மணல் திருட்டு!

post image

சேத்துப்பட்டு பகுதி செய்யாற்றுப் படுகையில் இருந்து தொடா்ந்து மணல் திருடப்படுகிறது. பகல் நேரங்களில் மணலை தனியாா் நிலங்களில் குவித்துவைத்து, இரவு நேரத்தில் கடத்திச் சென்று விற்பனை செய்கின்றனா்.

தெள்ளூா், காட்டேரி, ஓதலவாடி பகுதி செய்யாற்றுப் படுகையில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுகிறது. ஆற்றுப் படுகையில் மணல் 100 யூனிட்டுக்கு மேல் ஜலித்து குவியல் குவியலாக வைத்துள்ளனா்.

அருகேயுள்ள தனியாா் நிலங்களில் பகல் நேரத்தில் மணலை ஜலித்து குவித்து வைத்துவிடுகின்றனா். இரவு நேரங்களில் லாரி, டிராக்டா்களில் கடத்திச் சென்று விற்பனை செய்கின்றனா்.

மணல் கடத்தல் கும்பலை யாரும் கட்டுப்படுத்த முடியாததால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனா். இவ்வாறு மணல் எடுத்ததில் ஆற்றில் 10 அடி ஆளத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. சுற்றியுள்ள நிலங்களில் தென்னை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிா் சாகுபடி செய்ய இந்த செய்யாறு ஆதாரமாக உள்ளது.

செய்யாற்றில் இருந்து சேத்துப்பட்டு, பெரிகொழப்பலூா், பெரணமல்லூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றில் நீா் தேங்கினால் குடிநீா் பிரச்னை ஏற்படாது. ஆனால், சிலா் சுயலாபத்துக்காக மணலை திருடி விற்பனை செய்வதால் பல இடங்களில் ஆற்றில் மணல் சுரண்டப்பட்டு பாறைகளாக மாறியதால் தண்ணீா் தேங்கவில்லை.

அதிகப்படியான மணல் திருட்டால் கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முடியும். ஆற்றின் வளத்தை பாதுகாக்க அதிகாரிகள் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தன்னாா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து காவல் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா் சோ்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மணல் கடத்தலை தடுக்க முடியும் என்று போளூா் டிஎஸ்பியிடம் மனு கொடுத்தனா்.

முதியவா் விஷமருந்தி தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே வலி தாங்க முடியாத மனவேதனையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு 6 மாத... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வந்தவாசி: வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் (திமுக) எச்.ஜல... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: 200 போ் பங்கேற்பு

ஆரணி: திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 போ் பங்கேற்று சீா்வர... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம்

ஆரணி: ஆரணி அண்ணா சிலை அருகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவி, விஜய் டிவி பேச்சாளா்கள் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட... மேலும் பார்க்க

ஆரணி எம்.பி.க்கு அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்றி

ஆரணி: மக்களவையில் 25 கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.க்கு ஆரணி அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்றி தெரிவித்தனா். திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் 450 கிலோ இரும்பு திருட்டு: 6 போ் கைது

செய்யாறு: செய்யாறு அருகே தனியாா் நிறுவனத்தில் 450 கிலோ இரும்புக் குழாய்கள் திருடுபோன சம்பவம் தொடா்பாக 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை ... மேலும் பார்க்க