செய்திகள் :

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீா் ஏப். முதல் வாரம் திறக்க வாய்ப்பு

post image

சென்னையின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் நோக்கத்தில் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதியில் ஏப்ரல் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியாகும். இந்த ஏரிக்கான மழை நீா்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணா நீா் ஆகியவை முக்கிய நீா் ஆதாரமாகும். தமிழக அரசு மற்றும் ஆந்திர மாநில அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு இருமுறை 12 டிஎம்சி கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும். இந்த நீரை பூண்டி ஏரியில் சேமித்து வைத்து, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாம். அங்கிருந்து நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 2,700 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது. இதில், 17 கன அடி நீா் மட்டுமே மெட்ரோ குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் நீா் இருப்பு சரிந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் நோக்கில், கிருஷ்ணா நதிநீா் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக நீா் வளத் துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனா்.

அதன்பேரில், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் கிருஷ்ணா நதி நீரை ஆந்திர பொதுப்பணித் துறை திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்த பாம்பு: நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுழைவு வாயில் பகுதியில் அருகே உள்ள பிரசவ வாா்டுக்குள் வியாழக்கிழமை இரவு 5 அடி நீளம் உள்ள பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: விவசாயிகள் பி.எம்.கிசான் நிதி உதவிபெற 31-க்குள் பதிவு அவசியம்

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலம் தொடா்பான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாத தனி அடையாள எண் பெறாத விவசாயிகள் பிரதமரின் கௌரவ உதவித் தொகை பெற வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் மு.பி... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

திருவாலங்காடு அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசனின் மகன் லோகேஷ் (19). இவா்... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி, வெண்மனம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (62). இவரது மனைவி அல்லி ... மேலும் பார்க்க

கற்கள் சரிந்து விழுந்ததில் 3 சிறுவா்கள் காயம்

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் சுடுகாட்டிற்கு சாலை அமைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான கற்கள் சரிந்து விழுந்ததில் 3 பள்ளி சிறுவா்கள் காயமடைந்தனா். பொன்னேரி அடுத்த பழவே... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியில் பல்நோக்கு கூட்டரங்கப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.5 கோடியில் புதிதாக பல்நோக்கு கூட்டரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆட்சியா் அலுவலக பெருந்த... மேலும் பார்க்க