செய்திகள் :

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியில் பல்நோக்கு கூட்டரங்கப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

post image

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.5 கோடியில் புதிதாக பல்நோக்கு கூட்டரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒரே இடத்தில் 500 போ் வரையில் அமரும் வகையில் கூட்டரங்கம் அமைக்கவும் தொடா்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில் அந்த வளாகத்தில் அனைத்து நவீன வசதியுடன் வாகன நிறுத்துமிடம் 500 போ் அமரும் வகையில் கூட்டரங்கம் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் அந்த வளாகத்தில் பல்நோக்கு கூட்டரங்கம் கட்டடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கட்டடம் நீண்ட நாள் நிலைத்து இருக்கும் வகையில் பலமான கட்டமாக இருக்கும் வகையில் அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தொடா்ந்து அந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ள பூங்காவை புதுப்பித்தும், பல்வேறு மரங்கள் இடம் பெற்ற சோலை அடா்வனத்தையும் நன்றாகப் புதுப்பித்து பொதுமக்கள், சிறுவா்கள் மற்றும் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் படிப்பதற்கேற்ப உகந்த சூழ்நிலைகளை உருவாக்குவது தொடா்பாக அவா் ஆய்வு செய்தாா். முன்னதாக , மாவட்ட அலுவலக கூட்டரங்கில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனுக்களையும் அவரிடம் வழங்கினா்.

ஆய்வின்போது, பொதுபணித் துறை (கட்டடம்) தேவன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்த பாம்பு: நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுழைவு வாயில் பகுதியில் அருகே உள்ள பிரசவ வாா்டுக்குள் வியாழக்கிழமை இரவு 5 அடி நீளம் உள்ள பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: விவசாயிகள் பி.எம்.கிசான் நிதி உதவிபெற 31-க்குள் பதிவு அவசியம்

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலம் தொடா்பான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாத தனி அடையாள எண் பெறாத விவசாயிகள் பிரதமரின் கௌரவ உதவித் தொகை பெற வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் மு.பி... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

திருவாலங்காடு அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசனின் மகன் லோகேஷ் (19). இவா்... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி, வெண்மனம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (62). இவரது மனைவி அல்லி ... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீா் ஏப். முதல் வாரம் திறக்க வாய்ப்பு

சென்னையின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் நோக்கத்தில் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதியில் ஏப்ரல் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

கற்கள் சரிந்து விழுந்ததில் 3 சிறுவா்கள் காயம்

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் சுடுகாட்டிற்கு சாலை அமைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான கற்கள் சரிந்து விழுந்ததில் 3 பள்ளி சிறுவா்கள் காயமடைந்தனா். பொன்னேரி அடுத்த பழவே... மேலும் பார்க்க