செய்திகள் :

காட்பாடி: கழுத்தில் 6 அடி நீள பாம்புடன் யாசகம் கேட்ட கும்பல்; பீதியில் ஓட்டமெடுத்த மக்கள்!

post image

`பீதியைக் கிளப்பாம போங்க..’

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு பெண் உள்ளிட்ட நான்கு பேர் 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும், தோள் மீதும் போட்டுக் கொண்டு யாசகம் கேட்டு சுற்றிக்கொண்டிருந்தனர்.

பாம்புகளை காட்டி யாசகம் கேட்ட கும்பல்

இவர்களை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் பதறிப்போய் செய்வதறியாமல், அப்படியே அதிர்ந்து நின்றனர். ஒரு மொபைல் விற்பனை கடை வாசலிலும் நின்றுகொண்டு பணம் கேட்டு மிரட்டல் தோணியிலும் பேசிக்கொண்டிருந்தனர் இந்த கும்பல். `பீதியைக் கிளப்பாம போங்க..’ என்று செல்போன் கடை ஊழியர்கள் கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதையடுத்து, டீக்கடை ஒன்றில் பலர் நின்று டீ குடித்துகொண்டிருந்தனர். அதனருகிலும் சிலர் உட்கார்ந்துகொண்டிருந்தனர்.

`சட்டப்படி தவறு' - எச்சரிக்கும் வனத்துறை

அந்த கடைக்கும் பாம்புகளை தோள் மீதும், கழுத்திலும் போட்டு தடவி கொடுத்தபடி யாசகம் கேட்டுச் சென்றனர். அங்கிருந்தவர்கள் பீதிக்குள்ளாகி ஓட்டம் பிடித்தனர்.

பாம்பு

அவர்கள் மீது பாம்பு நெளிந்து வளைவதை பார்க்கும்போது உடம்பே சிலிர்க்கிறது. இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது வீடியோக்கள் வெளியாகி பதற வைத்திருக்கின்றன.

``இப்படி பாம்புகளைக் கொண்டு யாசகம் கேட்பது சட்டப்படி தவறு. யாசகம் பெற்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்கின்றனர் வனத்துறையினர். பீதியை கிளப்புறாங்கய்யா..!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ள... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ச... மேலும் பார்க்க

சம்பள பிரச்னை, தொழிலாளர்கள் மீது கோபம்... பஸ்சிற்கு தீவைத்தவிட்டு நாடகமாடிய ஓட்டுநர்; நடந்தது என்ன?

புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹின்சேவாடி பகுதியில் தனியார் கம்பெனி தொழிலாளர்களை கம்பெனிக்கு ஏற்றிச்சென்ற மினி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்தில் பஸ்சின் பின் கதவு திறக்காமல் ... மேலும் பார்க்க

பிரிந்து சென்ற லிவ் இன் பார்ட்னரைக் கடத்தி ரூ.12 கோடி கேட்ட பெண்

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் நிகில் பார்மர் (32). ஐ.ஐ.எம். பட்டதாரியான நிகில் நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வரை பிரீத்தி என்ற பெண்ணுடன் நான்கு ஆண்டுகள் லிவ் ... மேலும் பார்க்க

சென்னை: துப்பாக்கியால் சுட்டு ரௌடியைப் பிடித்த போலீஸ் - யார் இந்த ஐகோர்ட் மகாராஜா?

சென்னை வேளச்சேரி தரமணி இணைப்பு சாலையில் கடந்த 14-ம் தேதி வேளச்சேரி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த வினோத் (27), சென்னை மணலியைச் ச... மேலும் பார்க்க

காரைக்குடி: நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு சென்ற ரெளடி - போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயெ வெட்டிக்கொலை

நிபந்தனை ஜாமீனில் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வெளியே வந்த ரெளடியை, ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Murder (representational image)காரைக்குடி சேர்வார் ஊர... மேலும் பார்க்க