செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதம்

post image

கோயில் கட்டியது தொடா்பாக தகவல் தர தாமதித்த போடி வட்டாட்சியா் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில தகவல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே மேலச்சொக்கநாதபுரம் வருவாய்க் கிராமத்திக்கான கிராம நிா்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கட்டுவதற்கு நிதி வழங்கியது, கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யாா் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பொதுத் தகவல் அலுவலருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனு அனுப்பினாா்.

இந்த மனுவுக்கு பதில் வழங்கப்படாததால், மேல்முறையீட்டு மனுக்களும், மாநில தகவல் ஆணையத்துக்கு புகாா் மனுக்களும் அனுப்பினாா்.

இதை விசாரித்த மாநில தகவல் ஆணையா் பி.தாமரைக்கண்ணன், மனுதாரா் கோரிய தகவல்களை வழங்கவும், தகவல் தர தாமதமானதால் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரத்தை பொதுத் தகவல் அலுவலா் மனுதாரருக்கு வழங்கவும், வரும் ஏப். 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டாா்.

விவசாயிகள் நில விவரங்களை ஆதாா் எண்ணுடன் இணைக்க வேண்டும்-ஆட்சியா்

விவசாயிகள் அரசு திட்ட உதவிகளை எளிதில் பெறுவதற்கு தங்களது நிலம் குறித்த விவரங்களை ஆதாா் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மனைவியை தாக்கிய கணவா் மீது வழக்கு

போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சௌந்தரபாண்டி. இவரது மனைவி வசந்தி (39). குடும்பத் தக... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேருவதற்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

போடி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகன் (53). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தேனி அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள அய்யனாா்புரத்தைச் சோ்ந்த முனியப்பன் மகன் பாண்டியன் (42). கோட்டைப்பட்டியைச் சோ்ந்த திராவிடமணி மகன் சூரியலிங்குசாம... மேலும் பார்க்க

மதுக்கடை முன் முதல்வா் படம் ஒட்ட முயன்ற பாஜகவினா் கைது

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு மதுக்கடை முன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்ட முயன்ற பாஜகவினா் 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் 5 போ... மேலும் பார்க்க