செய்திகள் :

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

post image

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும். அதனை தொடர்ந்து, 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவதுடன் பெருமாள் எழுந்தருளும் வெளிப்பிரகார தேரோட்டம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவங்களுடன் பங்குனித் திருவிழா நிறைவுபெறும்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி

நிகழாண்டிற்கான தொடங்க விழா, இன்று காலை (செவ்வாய்க்கிழமை) 11.30 மணிக்கு காலை த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில், கருடன் உருவம் பொறித்த கொடியினை வேதமந்திரங்கள் கூறியபடி பட்டாட்ச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திராளன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இத்திருவிழாவினையொட்டி, ஒவ்வொரு நாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி, கண்ணன், கிருஷ்ணர், ராஜ பட்டாபிராமர், வேணு கோபாலர், மாயவநாதன், வைகுண்டநாதன் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வெளிப் பிராகாரங்களின் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வுகளாக, மார்ச்.23 கண்ட பேரண்ட பக்ஷி, மார்ச் 27ல் தங்க சூர்யபிரபை, ஏப். 1 கோரதம், ஏப்.2. காலை வெண்ணெய்த்தாழி, இரவு வெட்டுங்குதிரை, 3ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து,12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மார்ச் 4ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன், அறங்காவலர்கள் கே.கே.பி. மனோகரன், வெ. லதா, துரை நடராஜன், நிர்வாக அலுவலர் எஸ்.மாதவன், மண்டகப்படிதாரர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

‘திரையரங்கம் சிதறட்டும்..’ வெளியானது ஓஜி சம்பவம்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் பாடல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 23 நாள்களே உள்ள நிலையில் படத... மேலும் பார்க்க

இணையத்தைக் கலக்கும் தோனி - சந்தீப் ரெட்டி வங்கா விளம்பரம்!

மகேந்திர சிங் தோனி மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து நடித்த விளம்பரம் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 22 முதல் துவங்கவுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ப... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் பிரபல தொடர்! சோகத்தில் ரசிகர்கள்!

பனி விழும் மலர் வனம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.ஈரமான ரோஜாவே - 2 தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரனும் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த வினுஷா தேவியும் பிரதான பாத... மேலும் பார்க்க

சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்!

நடிகர் சிம்புவின் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந... மேலும் பார்க்க

தொப்பை ஏன் ஏற்படுகிறது? குறைப்பது எப்படி?

உடல் பருமன் என்பதைத் தாண்டி சிலருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து தொப்பை இருக்கும். இது உடலுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன் அழகு தொடர்பான பிரச்னையாகவும் மாறிவிட்டது. தொ... மேலும் பார்க்க

மார்ட்டின் ஸ்கார்செஸி படம் போலிருக்கும் வீர தீர சூரன்: எஸ்.ஜே.சூர்யா

மார்ட்டின் ஸ்கார்செஸி படம் போலிருக்கும் வீர தீர சூரன் என நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளார். டிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ச... மேலும் பார்க்க