செய்திகள் :

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

post image

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் சரணடைய நிர்பந்திக்கப்பட்ட நிலையில் நாஜி படைகளை எதிர்த்துப் போராடிய ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களில் கடைசி விமானியான ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். 1940 ஆம் ஆண்டு நாஜி படைகளை எதிர்த்துப் போராடிய ஜான் ஹெமிங்வேவுக்கு அப்போதய வயது 20 தான்.

இதையும் படிக்க: தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

1919 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்போதைய அயர்லாந்தின் தலைநகர் டப்ளினின் ராத்மைன்ஸ் பகுதியில் ஜான் ஹெமிங்வே பிறந்தார். பின்னர் 1938 ஆம் ஆண்டு பிரிட்டனின் ராயல் விமானப்படையில் விமானியாக சேர்ந்தார்.  

பிரான்சின் மீதான நாஜி படையெடுப்பின் போது, ​​பின்வாங்கும் பிரிட்டிஷ் படைகளுக்கு போர் விமானங்களின் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். போரின் முடிவில், ஹெம்மிங்வே வடக்கு இத்தாலியில் ஸ்பிட்ஃபயர்ஸை இயக்கிய எண். 43 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். 30 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் ஹெமிங்வே 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

இங்லீஷ் கால்வாய் கடற்கரையில் பிரிட்டன் போரில் பங்கேற்ற 2,941 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஜான் பெயரும் இடம்பெற்றுள்ளது.

1940 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிரான நாய்ச்சண்டை எனப்படும் போரில் ஜான் சிறப்பாக பணியாற்றினார். இதனால், இவருக்கு 1941 ஆம் ஆண்டு அவரின் வீரத்துக்காக பறக்கும் சிலுவை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தெற்கு ஸ்பெயினில் கடும் வெள்ளம்! நிரம்பிய நீர்நிலைகள்...மக்கள் வெளியேற்றம்!

ரஷியா -உக்ரைன் போர்: டிரம்புடன் தொலைபேசியில் பேசிய புதின்!

ரஷியா -உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மார்ச் 12 ஆம் த... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள அல் மவாஸி, அல் தராஜ், ராஃபா, கான... மேலும் பார்க்க

தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியரின் அலட்சியத்தால் பாதிப்படைந்தவருக்கு இழப்பீடாக ரூ. 432 கோடி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவில் மைக்கேல் கார்சியா என்பவர், பிரபல தேநீர் விற்பனையகமான... மேலும் பார்க்க

ஸ்பெயினில் கடும் வெள்ளம்: 350 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு பகுதிய... மேலும் பார்க்க

250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த டிவிட்டர் நிறுவன... மேலும் பார்க்க

பூமி திரும்பும் 4 பேரின் பணிகளை மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகள்!

விண்வெளியில் இருந்து பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரின் பணிகளை மேற்கொள்ளவுள்ளவர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கியிரு... மேலும் பார்க்க