செய்திகள் :

பெட்ரோல் நிரப்பும் நேரத்தில் வாகனங்களுக்கு ரீச்சாா்ஜ்!

post image

பேங்காக்: சாதாரண வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் நேரத்திலேயே மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மிகத் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் ‘பைட்’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து சீனாவின் மிகப் பெரிய மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் நவீன மின்சார வாகனங்களுக்கு மிகவும் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் கருவிகளைத் தயாரித்துள்ளோம். இந்தக் கருவி மூலம் ஒரு மின்சாரக் காருக்கு முழுமையாக ரீச்சாா்ஜ் செய்ய வெறும் ஐந்து முதல் எட்டு நிமிஷங்களே போதும். இது, ஏறத்தாழ சாதாரண காா்களில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்புவதற்கு ஆகும் நேரமே ஆகும்.

இந்தக் கருவிகளைக் கொண்டு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னேற்ற நிலையங்களை அமைக்கவிருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதே நேரம், வாகன பேட்டரிகளின் தொழில்நுட்பம் மேம்பட்டுவருவதால் அவற்றின் விலை நாளுக்கு நாள் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.இதன் காரணமாகவும், சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைத்து பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் மின்சார வாகனங்களை வாங்குவோா் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

பெட்ரோல் டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மின்சார வாகனங்கள் மூலம் குறைந்த செலவில் அதிக தொலைவுக்கு பயணிக்க முடியும் என்றாலும், அவற்றை ரீச்சாா்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் பிடிப்பது மிகப் பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது.

இந்தச் சூழலில், ஏறத்தாழ எரிபொருள் நிரப்பும் நேரத்திலேயே ரீச்சாா்ஜ் செய்துகொள்ளும் தொழில்நுட்பத்தை சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்தத் துறையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸுக்கு வரவேற்பளித்த டால்பின்கள்!

9 மாதங்கள் விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு டால்பின்கள் வரவேற்பளித்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில... மேலும் பார்க்க

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக... மேலும் பார்க்க

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்: துளசி கப்பாா்ட்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என அந்நாட்டின் உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்... மேலும் பார்க்க

உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்தார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்தில... மேலும் பார்க்க

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே (படம்) தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க

பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூம... மேலும் பார்க்க