செய்திகள் :

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

post image

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையில்லை எனவும், அவர் ஸ்மார்ட்டாக விளையாட வேண்டும் எனவும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏபி டி வில்லியர்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி கிரிக்கெட்டினை அனுபவித்து விளையாடுவதாக நினைக்கிறேன். அவர் பில் சால்ட்டுடன் விளையாடும்போது, அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையிருக்காது என நினைக்கிறேன். நாம் பார்த்ததிலேயே அதிரடியாக விளையாடக் கூடிய ஆட்டக்காரர்களில் ஒருவர் பில் சால்ட். விராட் கோலியின் மீதான அழுத்தத்தை பில் சால்ட் எடுத்துவிடுவார் என நினைக்கிறேன்.

இதையும் படிக்க: காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!

பல ஆண்டுகளாக விராட் கோலி கிரிக்கெட்டில் செய்து வருவதை தொடர்ந்தாலே போதுமானதாக இருக்கும். அவர் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும். அவருக்கு எப்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் என்பது தெரியும்.

கடந்த சில சீசன்களாக விராட் கோலியின் பேட்டிங்கின் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் அவரது ஆட்டத்தில் சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவரும் மனிதர்தான். அவரது மனதில் சில சந்தேகங்கள் எழுந்திருக்கலாம். ஆனால், விராட் கோலி எப்போதும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். முக்கியமான தருணங்களில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத் தந்துள்ளார் என்றார்.

இதையும் படிக்க: ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தொடர்ச்சியாக அதிக ரன்கள் குவித்து வரும் போதிலும், கடந்த இரண்டு சீசன்களாக விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கியப் பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியி... மேலும் பார்க்க

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொ... மேலும் பார்க்க

ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நீண்ட காலத்துக்கு கேப்டனாக வழிநடத்துவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தே... மேலும் பார்க்க

ரமலான் நோன்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்! திடலில் மயங்கி விழுந்து பலியான சோகம்!

ஆஸ்திரேலியாவில் நோன்புடன் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் திடலில் மயங்கி விழுந்து பலியானார்.பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைல் ஸஃபர் கான் என்ற கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கிளப... மேலும் பார்க்க

உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து லக்னௌ அணி உரிமையாளர், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அணி வீரர்கள் வாழ்த்துப்பெற்றனர்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்... மேலும் பார்க்க