செய்திகள் :

ரமலான் நோன்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்! திடலில் மயங்கி விழுந்து பலியான சோகம்!

post image

ஆஸ்திரேலியாவில் நோன்புடன் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் திடலில் மயங்கி விழுந்து பலியானார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைல் ஸஃபர் கான் என்ற கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கிளப் போட்டிகளில் விளையாடி வந்தார்.

கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் பிரின்ஸ் ஆல்ஃபிரட் ஓல்ட் கல்லூரி மற்றும் ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணி மோதியுள்ளன. இதில், ஜுனைல் ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். மாலை 4 மணியளவில் அதீத வெப்பம் காரணமாக ஜுனைல் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். 40 ஓவர்கள் பீல்டிங் செய்துவிட்டு ஏழு ஓவர்கள் பேட்டிங் செய்த பிறகு, ஆஸ்திரேலிய பகல் நேரப்படி மாலை 4 மணியளவில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தார்.

இதையும் படிக்க: இணையத்தைக் கலக்கும் தோனி - சந்தீப் ரெட்டி வங்கா விளம்பரம்!

உலகம் முழுவதும் வெய்யில் வாட்டிவதைத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தெற்கு ஆஸ்திரேலியாவிலும் கடுமையான வெய்யிலின் தாக்கம் இருந்து வருகிறது. போட்டி நடந்த சனிக்கிழமை அன்று 40 டிகிரி அளவுக்கு வெய்யில் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

42 டிகிரிக்கு மேல் வெய்யில் இருந்தால் போட்டி ரத்து செய்யப்படும் என்று விதியும் உள்ளது. இருப்பினும், அதற்கு குறைவாக இருந்ததால் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டது.

ரமலான் மாதம் என்பதால், ஜுனைல் கான் நோன்பு கடைபிடித்து வந்துள்ளார். மேலும், அதிக நீரிழப்பு காரணமாக நீரும் அருந்திவந்துள்ளார். இருந்தாலும் மைதானத்தில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிவந்த ஜுனைல் கடந்த 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!

ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கியப் பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியி... மேலும் பார்க்க

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குக... மேலும் பார்க்க

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொ... மேலும் பார்க்க

ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நீண்ட காலத்துக்கு கேப்டனாக வழிநடத்துவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தே... மேலும் பார்க்க

உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து லக்னௌ அணி உரிமையாளர், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அணி வீரர்கள் வாழ்த்துப்பெற்றனர்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்... மேலும் பார்க்க