செய்திகள் :

ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

post image

ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நீண்ட காலத்துக்கு கேப்டனாக வழிநடத்துவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க: காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!

இந்த முறை ஐபிஎல் தொடரில் அணிகளின் கேப்டன்களில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார், லக்னௌ அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலம் தொடர்வார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜத் படிதார் ஆர்சிபியின் கேப்டனாக நீண்ட காலம் தொடர்வார் என விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: ஐபிஎல் 2025: கேள்விக்குறியாக இருக்கும் ராஜஸ்தான் அணியின் சமநிலை!

இது தொடர்பாக ஆர்சிபி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விராட் கோலி பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரஜத் படிதார் நீண்ட காலம் வழிநடத்தப் போகிறார். அவர் அணியின் கேப்டனாக மிகப் பெரிய வேலையை செய்யப் போகிறார். வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் அவரிடம் இருக்கிறது. ஆர்சிபி அணியில் விளையாடுவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

18 ஆண்டுகளாக ஆர்சிபிக்காக விளையாடி வருகிறேன். ஆர்சிபிக்காக விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். இந்த முறை ஆர்சிபி அணி மிகவும் சிறப்பாக உள்ளது. அணியில் நிறைய திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தனிப்பட்ட முறையில் மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!

ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரஜத் படிதார் பேசியதாவது: லெஜண்டரி வீரர்களான விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் போன்றோர் ஆர்சிபிக்காக விளையாடியுள்ளனர். அவர்களைப் பார்த்து நான் வளர்ந்தேன். ஆரம்பத்திலிருந்தே ஆர்சிபி அணியை எனக்கு மிகவும் பிடிக்கும். டி20 கிரிக்கெட்டில் மிகப் பெரிய அணிகளில் ஒன்றான ஆர்சிபியை அதன் கேப்டனாக வழிநடத்தவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கியப் பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியி... மேலும் பார்க்க

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குக... மேலும் பார்க்க

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொ... மேலும் பார்க்க

ரமலான் நோன்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்! திடலில் மயங்கி விழுந்து பலியான சோகம்!

ஆஸ்திரேலியாவில் நோன்புடன் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் திடலில் மயங்கி விழுந்து பலியானார்.பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைல் ஸஃபர் கான் என்ற கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கிளப... மேலும் பார்க்க

உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து லக்னௌ அணி உரிமையாளர், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அணி வீரர்கள் வாழ்த்துப்பெற்றனர்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்... மேலும் பார்க்க