செய்திகள் :

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

post image

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 91 ரன்களில் ஆல்-அவுட்டான பாகிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. இதனால், நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிக்க: ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

முதல் போட்டியின் 8-வது ஓவரின் போது பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் குஷ்தில் ஷா ரன் எடுக்க ஓடும்போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் சாக் பௌல்க்ஸ் தோள்பட்டையின் மீது தேவையின்றி மோதினார்.

டி20 போட்டி விதிகளை மீறிய குஷ்தில் ஷாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர் ஜெஃப் க்ரோவ் விதித்த தடைகளுக்கு குஷ்தில் ஷா ஒப்புக்கொண்டதால், அவருக்கு எந்த விசாரணையும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ. 869 கோடி இழப்பு! வீரர்களின் ஊதியம் 90% குறைப்பு!

ராமநவமி விழா: பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தா - லக்னௌ போட்டியில் மாற்றமா?

ராமநவமி விழா கொண்டாட்டங்களுக்காக கொல்கத்தா - லக்னௌ இடையேயான போட்டியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈட... மேலும் பார்க்க

சிஎஸ்கே - மும்பை போட்டி: இன்று டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படவுள்ளது..சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23ம் தேதியன்று நடைபெறும் சென்னை, மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கியப் பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியி... மேலும் பார்க்க

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குக... மேலும் பார்க்க

ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நீண்ட காலத்துக்கு கேப்டனாக வழிநடத்துவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தே... மேலும் பார்க்க