செய்திகள் :

புதுச்சேரி: ``கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்" - முதலமைச்சர் ரங்கசாமி

post image

புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கியது. 12-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் முதல்வர் ரங்கசாமி. அதனடிப்படையில் இன்று, ``புதுச்சேரியில் சிறிய மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் தொடங்கி எந்தப் பெயர் பலகையிலும் தமிழ் மொழி இல்லை. தமிழ் மொழியைத் தவிர்த்துவிட்டு பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன” என்று எம்.எல்.ஏ-க்கள் குற்றம் சுமத்தினர்.

தமிழ் கோப்புப் படம்

அவர்களுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து பிராந்தியங்களிலும், பகுதிகளிலும் இனி அனைத்து வியாபாரிகள், வணிகர்கள் கட்டாயமாக தமிழில் பெயர் வைக்கவேண்டும். பெயர் பலகை மற்றும் கடைகளின் பெயர்கள் தமிழில்தான் இருக்கவேண்டும். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது கடமை மற்றும் உணர்வு. அதேபோல அரசுத் துறைகளின் அழைப்பிதழ்களிலும் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதேபோல தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று பதிலளித்திருக்கிறார்.

தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!

தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்களின் போட்டோக்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப... மேலும் பார்க்க

ஆரோவில்: `மரங்களை வெட்டி வளர்ச்சி பணிகளை செய்யலாம்!'- பசுமை தீர்பாயம் உத்தரவை ரத்துசெய்த நீதிமன்றம்

புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில். மனித இனத்தின் ஒற்றுமையை பரிசோதித்து பார்ப்பதற்காக, மறைந்த அரவிந்த அன்னை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் ஆரோவில் சர்வதேச நகரம். 5... மேலும் பார்க்க

விழுப்புரம்: `விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி செல்லும்!’ – சென்னை உயர் நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டித் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, 2024 ஜூலை 10-ம் தேதி அங்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, ... மேலும் பார்க்க

Israel - Gaza : மீண்டும் போரை தொடங்கியிருக்கும் இஸ்ரேல்... காஸா மீது தாக்குதல்; 300 பேர் பலி

ஜனவரி மாதம் தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்... மேலும் பார்க்க