செய்திகள் :

தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!

post image

தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்களின் போட்டோக்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் போட்டோவை அடையாளம் தெரியாத யாரோ சிலர் கோட்டாட்சியர் அலுவலக குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுள் சிலர், குப்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோட்டாட்சியர் அலுவலகம்

இதனால் ஏற்பட்ட மனப்பொருமலில், தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கே இந்த நிலைமையா? இறந்தவர்களுக்கான மதிப்பும், மரியாதையும் இவ்வளவுதானா? என அங்கிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாக குப்பையில் கிடந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இது குறித்து தகவலறிந்த தென்காசி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை வைத்தே, குப்பையில் வீசப்பட்டு கிடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல வைத்தனர்.

அதிகாரிகள்

இருந்தபோதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை குப்பையில் போட்ட அதிகாரிகள் யார்? அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்மாவட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கண்டன குரல்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க“முதல்வர் சொல்லியிருப்பதில் நியாயம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாசித்த கடிதத்திலேயே, ‘கையெழுத்து போடுக... மேலும் பார்க்க

யார் யாருடைய B Team? | Parliament Vs TN Assembly | Modi Stalin DMK BJP Imperfect Show 18.03.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* ரூ.1000 கோடி ஊழல் புகார் ஆதாரமில்லை - ரகுபதி.* 5 மணி நேரம் கூட காவலில் இருக்க முடியாதா? - சேகர்பாபு.* தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை - அமைச்சர் சேகர்பாபு.* தமிழிசை, எ... மேலும் பார்க்க

EPS-க்கு செக் வைத்த Premalatha, பின்னணியில் Udhayanidhi ஸ்கிரிப்ட்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்'திமுக பட்ஜெட் சிறப்பாக உள்ளது' என பாராட்டியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 'கூட்டணி சம்பந்தமாக தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என எடப்பாடிக்கு செக் வைத்துள்ளார் பிரேமலதா... மேலும் பார்க்க

ஆரோவில்: `மரங்களை வெட்டி வளர்ச்சி பணிகளை செய்யலாம்!'- பசுமை தீர்பாயம் உத்தரவை ரத்துசெய்த நீதிமன்றம்

புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில். மனித இனத்தின் ஒற்றுமையை பரிசோதித்து பார்ப்பதற்காக, மறைந்த அரவிந்த அன்னை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் ஆரோவில் சர்வதேச நகரம். 5... மேலும் பார்க்க

விழுப்புரம்: `விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி செல்லும்!’ – சென்னை உயர் நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டித் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, 2024 ஜூலை 10-ம் தேதி அங்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, ... மேலும் பார்க்க