செய்திகள் :

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

post image

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றினர்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிரடியாக உயர்த்தி மசோதாவை ஒருமதனாக நிறைவேற்றியுள்ளது தெலங்கானா அரசு.

இதையும் படிக்க : தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

”தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை கண்டறியப்பட்டதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களுக்கு சம பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக நீதியை நோக்கிய புரட்சிகரமான முன்னெடுப்பாகும். இதன்மூலம் 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும். இதற்கான குழுவையும் தெலங்கானா அரசு அமைத்துள்ளது.

தெலங்கானா காட்டிய வழியை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும். நாங்கள் அதனை நடத்திக் காட்டுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்... மேலும் பார்க்க

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க