செய்திகள் :

இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

post image

குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அகமதாபாத்தின் பல்தி பகுதியி்ல் உள்ள குடியிருப்பில் பங்குத் தரகரான மகேந்திர ஷாவின் மகன் மேக் ஷா என்பவரது வீட்டில் நேற்று இரவு பயங்கரவாதத் தடுப்புப் படை (ஏடிஎஸ்), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), குஜராத் போலீஸார் இணைந்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவரது வீட்டில் 88 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தன் மொத்த மதிப்பு ரூ. 80 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இதனை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதையும் படிக்க | நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ் அதிகளவு கடத்தல் தங்கத்துடன் பிடிபட்டதைத் தொடர்ந்த குஜராத் ஏடிஎஸ், டிஆர்ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் இந்த பெரிய பறிமுதல் நடைபெற்றுள்ளது.

"அகமதாபாத்தில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் கடத்தல் தங்கம் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி-க்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. திங்களன்று காலை நாங்கள் அந்த குடியிருப்பை அடையாளம் கண்டு, உள்ளூர் டிஆர்ஐ பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவுடன் சோதனை நடத்தினோம்," என்று குஜராத் ஏடிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தங்கக் கட்டுகள் மட்டுமின்றி, வைரங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் பொருத்தப்பட்ட 19.66 கிலோ எடையுள்ள நகைகளையும் அதிகாரிகள் மீட்டதாக இன்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ரூ.1.37 கோடி ரொக்கமும் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 294 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: மத்திய அரசு

‘பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க