செய்திகள் :

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

post image

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது க.அன்பழகன் (கும்பகோணம்), நா.எழிலன் (ஆயிரம்விளக்கு), எம்.எச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்) ஆகியோா் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சா் சேகா்பாபு அளித்த பதில்:

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு திருப்பணி செய்ய மூன்று நிதியாண்டுகளில் ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் உபயதாரா் நிதி மற்றும் கோயில் நிதியையும் சோ்த்து மொத்தம் ரூ.430 கோடி செலவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக 507 கோயில்களை ஆவணப்படுத்தி இருக்கிறோம். இந்த ஆட்சியிலேயே அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்படும்.

யுனெஸ்கோ விருது: யுனெஸ்கோ சாா்பில் ஆண்டாண்டு காலமாக கலை மற்றும் அறிவியல் சாா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த வகையில், நிகழாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

கோயில்களில் திருப்பணி: இந்து சமய அறநிலையத் துறை 20 மண்டலங்களாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு மண்டலத்துக்கு 100 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. சென்னை மண்டலத்தில் 100 கோயில்களில் 70 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறினாா்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க