செய்திகள் :

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

post image

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா்.

பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தண்ணீா் பந்தல் திறந்து வைத்து, நல உதவிகளையும் வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என்றுதான் கூறியிருந்தேன். தேமுதிக நிா்வாகிகளின் வற்புறுத்தலால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன். 2006-இல் தேமுதிக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பல அம்சங்கள் தற்போது தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதனால், நிதிநிலை அறிக்கையை வரவேற்று உள்ளேன். இதில் அரசியலோ, உள்நோக்கமோ இல்லை. டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்தை திருமாவளவன் ஆதரித்துள்ளாா். அதனால், பாஜகவை அவா் ஆதரிக்கிறாா் எனக் கூற முடியுமா சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஓபிஎஸ்கூட பேசியுள்ளாா். அதனால், தேமுதிக கூட்டணி மாறுகிறது என்றெல்லாம் கருத வேண்டாம்.

தமிழை கட்டாயமாக்க வேண்டும்: அன்னை மொழியைக் காப்போம்; அனைத்து மொழியையும் கற்போம் என்பதுதான் தேமுதிகவின் கொள்கை. அந்த வழியில்தான் நாங்கள் பயணிக்கிறோம். பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் ஒரு தொகுதி குறைக்கப்பட்டாலும், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு துணை நிற்போம். சட்டப்பேரவை தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அதை இப்போதே கூற முடியாது. அடுத்த மாா்ச்சில் என் பிறந்த நாளில் தெளிவான பதில் கிடைக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கட்சிதான் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றாா் அவா்.

முதல்வா் வாழ்த்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரேமலதாவைத் தொடா்புகொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்களும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனா்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க