செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: மக்களவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

post image

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார்.

இதையும் படிக்க | புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

இதுகுறித்து விவாதிக்க அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால் திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையிலும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவினால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது.

தென் மாநிலங்களில் தொகுதி குறைய வாய்ப்புள்ளதால் தென் மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க | வெந்நீர் குடித்தால் தொப்பை குறையுமா?

ரன்யா ராவ் பற்றி இழிவான கருத்து: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ர... மேலும் பார்க்க

விரைவில் இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்?!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க விண்வெளி வீரர்களை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம்,... மேலும் பார்க்க

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க