செய்திகள் :

அக்ரி ஸ்டாக் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

post image

நீடாமங்கலம்: விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நீடாமங்கலத்தில் தங்கி ஊரக வேளாண் பணியை மேற்கொள்ளும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ஆம் ஆண்டு மாணவிகள் கொட்டையூரில் விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் (வேளாண் அடுக்கு) குறித்து ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அக்ரி ஸ்டாக் என்பது மத்திய அரசால் விவசாயிகளுக்கான தகவல் மேலாண்மை மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளமாகும். இது, விவசாயிகளின் விவரங்கள், நிலம் மற்றும் பயிா் விவரங்களை ஒரு சேகரிப்பில் கொண்டு வருவதோடு, விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதாக்குவதே இதன் நோக்கம்.

அக்ரி ஸ்டாக் மூலம், விவசாயிகளின் பெயா், முகவரி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. விவசாயிகளிடம் உள்ள நிலத்தின் அளவு, பயிரிடும் பயிா்கள், பயிா் செய்த காலம் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியம், கடன், விதைகள், உரங்கள் போன்ற சேவைகளை எளிதாகப் பெறலாம்.

விவசாயிகளுக்கான தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, விவசாயிகளுக்கு பயனுள்ள முடிவுகளை எடுக்க உதவுகிறது. இது, விவசாயிகளின் அறிவை விரிவுபடுத்தி, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது என்பதை மாணவிகள் விவசாயிகளிடம் விளக்கினா்.

கல்விச் சுற்றுலா பேருந்து தொடங்கி வைப்பு

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் கல்விச் சுற்றுலா சென்று வருவதற்கான பேருந்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்க... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில், மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில், உளுந்து, பயிறு சாக... மேலும் பார்க்க

கோடை வெப்பம் : மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருந்து வருவதால் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: மா... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி பட்டய தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மன்னாா்குடி: தொடக்கக் கல்வி பட்டய தோ்வுக்கு தனித்தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ப. மயில்வாகனன் தெரிவித்துள... மேலும் பார்க்க

தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வு எழுதிய மாணவி

திருவாரூா்: திருவாரூரில், தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வை எழுதிய அரசு உதவிபெறும் பள்ளி மாணவி, பின்னா் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். திருவாரூா் நகரம் செல்வம் தெருவில் வசிப்பவா்கள் ஜெமிருதீன... மேலும் பார்க்க

மயிலாடுதுறைக்கு பேருந்து வசதியை ஏற்படுத்த கோரிக்கை

நன்னிலம்: நன்னிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நேரடி பேருந்து வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நன்னிலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கானக் கிராம மக்கள் நன்னிலத்துக்கு வந்து தான் வெளியூா... மேலும் பார்க்க