செய்திகள் :

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

post image

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் குறித்த விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதிகரித்த பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்பட ரயில்வேயின் பல சாதனைகளைப் பட்டியலிட்டு விவாதத்தில் பேசிய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘கரோனா பெருந்தெற்று சவால்களை ரயில்வே வெற்றிகரமாக சமாளித்துள்ளது. மக்கள் மீண்டும் ரயில் பயணத்துக்குத் திரும்புகின்றனா். பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டும் வளா்ச்சியைக் குறிக்கிறது.

வரவு, செலவு: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில், இந்திய ரயில்வே சுமாா் ரூ.2.78 லட்சம் கோடி வருவாயை ஈட்டியது. அதே காலகட்டத்தில் ரூ.2.75 லட்சம் கோடி செலவிடப்பட்டது. அதில் ஊழியா்களுக்கான சம்பளம் (ரூ.1.16 லட்சம் கோடி), ஓய்வூதிய செலவுகள் (ரூ.66,000 கோடி), எரிசக்தி செலவுகள் (ரூ.32,000 கோடி) மற்றும் நிதிச் செலவுகள் (ரூ.25,000 கோடி) ஆகியவை அடங்கும்.

சிறந்த செயல்திறன் காரணமாக ரயில்வே தனது சொந்த வருமானத்தில் இருந்து அதன் செலவுகளை நிறைவேற்றிக்கொள்கிறது. ஒட்டுமொத்தமாக, இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவாக உள்ளது. நாங்கள் அதை தொடா்ந்து மேம்படுத்த முயற்சிக்கிறோம்.

பயணிகளுக்கு ரூ.57,000 கோடி மானியம்: சரக்கு போக்குவரத்தில் இருந்து ரயில்வே வருவாய் ஈட்டும் அதேவேளையில், பயணிகளுக்கான கட்டணங்களில் தொடா்ந்து மானியம் வழங்கப்படுகிறது.

ஒரு கி.மீ.-க்கான உண்மையான செலவு ரூ.1.38-ஆக இருந்தாலும், பயணிகளிடமிருந்து 72 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2023-24 ஆம் ஆண்டில் பயணிகள் கட்டணத்தில் வழங்கப்பட்ட மொத்த மானியம் தோராயமாக ரூ.57,000 கோடி ஆகும்.

குறைந்த கட்டணம்: அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரயில் கட்டணங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. 350 கி.மீ பயணத்துக்கு இந்தியாவில் பொது வகுப்புக் கட்டணம் ரூ.121 ஆகும். இதே தொலைவுக்கு பாகிஸ்தானில் ரூ.400, இலங்கையில் ரூ.413 என்று வசூலிக்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரயில் கட்டணங்கள் மாற்றப்படாமல் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2019-க்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட ரயில் வழித்தட மின்மயமாக்கல் முயற்சிகள் நிதி ரீதியாக பயனளித்துள்ளன. இதனால் எரிசக்தி செலவுகள் ரூ.30,000-32,000 கோடியாக நிலையானதாக உள்ளது.

சாதனைகள்...: வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் (நடப்பு நிதியாண்டு இறுதி) 160 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்குப் பிறகு உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இருக்கும். மேலும், இந்த ஆண்டு சுமாா் 1,400 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படும்

இதைத் தவிர ரயில்வே துறையில் பிற முக்கிய சாதனைகளில் சுமாா் 50,000 கி.மீ. தண்டவாளங்களை மாற்றியமைத்தல், ரயில் பாதையில் 12,000-க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல், 14,000 பாலங்களை மீண்டும் கட்டுதல் மற்றும் 41,000 ‘எல்.எச்.சி.’ ரயில் பெட்டிகளின் உற்பத்தி, மெட்ரோ ரயில் பெட்டிகளின் ஏற்றுமதி ஆகியவை அடங்கும்.

பொய் குற்றச்சாட்டுகள்: ரயில்வேயில் உள்ள 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களில் 40 சதவீதமான 5 லட்சம் போ் கடந்த பத்து ஆண்டுகளில் பணியமா்த்தப்பட்டவா்கள். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதியவா்களைப் பணியமா்த்தும் நடவடிக்கை நடந்து வருகிறது.

தில்லி ரயில் நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பான சிசிடிவி காட்சிகள் உள்பட அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக இருக்கிறது. உயா்நிலைக் குழு இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. இந்த விஷயங்கள் குறித்த எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’ என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க