செய்திகள் :

மயிலாடுதுறைக்கு பேருந்து வசதியை ஏற்படுத்த கோரிக்கை

post image

நன்னிலம்: நன்னிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நேரடி பேருந்து வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கானக் கிராம மக்கள் நன்னிலத்துக்கு வந்து தான் வெளியூா்களுக்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள் நாள்தோறும் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், நன்னிலத்தில் காலை 6 மணிக்குப் பிறகு 9 மணிக்கு தான் மயிலாடுதுறைக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. இதனால் மயிலாடுதுறை நோக்கி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோா், கும்பகோணம், நாகை பேருந்தில் ஏறி சன்னாநல்லூா் வரை சென்று அங்கிருந்து மயிலாடுதுறை பகுதியை நோக்கி செல்ல வேண்டும். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோா் தாமதமாகச் செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

எனவே, காலை 8 மணிக்கு நன்னிலத்திலிருந்து நேரடியாக மயிலாடுதுறைச் செல்லவும், அதேபோல பள்ளி , கல்லூரி, அலுவலகங்கள் முடியும் நேரத்தில் மயிலாடுதுறையிலிருந்து நன்னிலத்திற்கும் நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டுமென நன்னிலம் பகுதி மக்கள் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக நாகை பொது மேலாளருக்குக் கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளனா்.

அக்ரி ஸ்டாக் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

நீடாமங்கலம்: விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நீடாமங்கலத்தில் தங்கி ஊரக வேளாண் பணியை மேற்கொள்ளும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்று... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா பேருந்து தொடங்கி வைப்பு

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் கல்விச் சுற்றுலா சென்று வருவதற்கான பேருந்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்க... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில், மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில், உளுந்து, பயிறு சாக... மேலும் பார்க்க

கோடை வெப்பம் : மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருந்து வருவதால் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: மா... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி பட்டய தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மன்னாா்குடி: தொடக்கக் கல்வி பட்டய தோ்வுக்கு தனித்தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ப. மயில்வாகனன் தெரிவித்துள... மேலும் பார்க்க

தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வு எழுதிய மாணவி

திருவாரூா்: திருவாரூரில், தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வை எழுதிய அரசு உதவிபெறும் பள்ளி மாணவி, பின்னா் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். திருவாரூா் நகரம் செல்வம் தெருவில் வசிப்பவா்கள் ஜெமிருதீன... மேலும் பார்க்க