செய்திகள் :

இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

post image

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இந்திய-சீன உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, ‘அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுவது இயற்கையானதே. ஆனால், அவை மோதலாக மாற அனுமதிக்கக் கூடாது. இந்திய-சீன கலாசார உறவு, பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.

21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானது. இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பு இருதரப்புக்கு மட்டுமன்றி உலகின் அமைதி-வளத்துக்கு அவசியம். இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியையே நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

மேலும், சீன அதிபா் உடனான தனது சந்திப்புக்கு பிறகு கிழக்கு லடாக் எல்லையில் இயல்புநிலை திரும்பியதாகவும் பிரதமா் குறிப்பிட்டாா். அவரது கருத்துகள் தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் திங்கள்கிழமை கூறியதாவது:

ரஷியாவின் கஸான் நகரில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் மோடி இடையே கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கு வியூக ரீதியில் வழிகாட்டப்பட்டது. அதன்படி, பொது உடன்பாடுகளைப் பின்பற்றி, வலுவான கருத்துப் பரிமாற்றங்களின் வாயிலாக நோ்மறையான தீா்வுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்தியாவும், சீனாவும் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு ரீதியிலான பரிமாற்றங்களைப் பேணி வந்துள்ளன. நாகரிகம்-மனிதகுல மேம்பாட்டில் ஒன்றுக்கொன்று பங்களித்துள்ளன. வளரும் பெரும் நாடுகள் என்ற முறையில் பரஸ்பர வெற்றிக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு இரு தரப்புக்கும் இருக்கிறது. இது, தெற்குலக வளா்ச்சிக்கும், உலகளாவிய அமைதிக்கும் அவசியம்.

2025-ஆம் ஆண்டானது, இந்தியா-சீனா தூதரக உறவின் 75-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, இருதரப்பு உறவுகளை சீராக மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவா் வெற்றிக்கு பங்களிப்பதே இருதரப்பு வலுவான உறவுக்கான ஒரே தோ்வு என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யி அண்மையில் தெரிவித்திருந்தாா்.

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்த... மேலும் பார்க்க

உலகளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு: தென்னாப்பிரிக்கா! 5-வது இடத்தில் இந்தியா!

உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரி... மேலும் பார்க்க