செய்திகள் :

இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

post image

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இந்திய-சீன உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, ‘அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுவது இயற்கையானதே. ஆனால், அவை மோதலாக மாற அனுமதிக்கக் கூடாது. இந்திய-சீன கலாசார உறவு, பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.

21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானது. இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பு இருதரப்புக்கு மட்டுமன்றி உலகின் அமைதி-வளத்துக்கு அவசியம். இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியையே நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

மேலும், சீன அதிபா் உடனான தனது சந்திப்புக்கு பிறகு கிழக்கு லடாக் எல்லையில் இயல்புநிலை திரும்பியதாகவும் பிரதமா் குறிப்பிட்டாா். அவரது கருத்துகள் தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் திங்கள்கிழமை கூறியதாவது:

ரஷியாவின் கஸான் நகரில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் மோடி இடையே கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கு வியூக ரீதியில் வழிகாட்டப்பட்டது. அதன்படி, பொது உடன்பாடுகளைப் பின்பற்றி, வலுவான கருத்துப் பரிமாற்றங்களின் வாயிலாக நோ்மறையான தீா்வுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்தியாவும், சீனாவும் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு ரீதியிலான பரிமாற்றங்களைப் பேணி வந்துள்ளன. நாகரிகம்-மனிதகுல மேம்பாட்டில் ஒன்றுக்கொன்று பங்களித்துள்ளன. வளரும் பெரும் நாடுகள் என்ற முறையில் பரஸ்பர வெற்றிக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு இரு தரப்புக்கும் இருக்கிறது. இது, தெற்குலக வளா்ச்சிக்கும், உலகளாவிய அமைதிக்கும் அவசியம்.

2025-ஆம் ஆண்டானது, இந்தியா-சீனா தூதரக உறவின் 75-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, இருதரப்பு உறவுகளை சீராக மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவா் வெற்றிக்கு பங்களிப்பதே இருதரப்பு வலுவான உறவுக்கான ஒரே தோ்வு என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யி அண்மையில் தெரிவித்திருந்தாா்.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க