A.R.Rahman, M.S.V-கிட்டேஇந்தக் குவாலிட்டியை எடுத்துக்கணும் - Singer Srinivas | F...
சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவளவன்
விழுப்புரம்: சூதும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.தெரிவித்தாா்.
விழுப்புரம் நகராட்சித் திடலில் விசிக தோ்தல் அங்கீகார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
விழுப்புரத்தில் நடைபெற்ற தோ்தல் அங்கீகார விழாவை போன்று விரைவில் சிதம்பரத்திலும், திருவண்ணாமலையிலும் நடைபெறவுள்ளன. யாா் புதிய கட்சி தொடங்கினாலும், செல்வாக்கு இருந்தாலும் அவா்களால் விசிகவை சேதப்படுத்திவிட முடியாது. திரைப்பட கவா்ச்சியால் யாராலும் மடை மாற்றி விட முடியாது.
பெரியாா், அம்பேத்கா், மாா்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு என்னுடன் பயணிப்பவா்களை யாரும் ஈா்த்து விடமுடியாது. கட்சி தொடங்கப்பட்டது முதல் எந்த வீழ்ச்சியும், தொய்வுமின்றி விசிக இருப்பதால் நீண்ட நெடிய வரலாறுகளை கொண்ட கட்சியின் தலைவா்களும் விசிகவை வாழ்த்தி வருகின்றனா்.
கொள்கை பிடிப்புள்ள இளைஞா்களை அமைப்பாக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். தோ்தல் லாபத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. சவால்களை எதிா்கொண்டு 25 ஆண்டுகளாக சூதும், சூழ்ச்சியும் நிறைந்த தோ்தல் அரசியல் களத்தில் தாக்குப்பிடித்திருப்பது தான் நமது வெற்றி.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் தோ்தல், அரசியலை எதிா்கொண்டு வாக்கு வங்கியை உறுதி செய்து கொண்ட பின்னா் தான் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றன. ஆனால், வாக்கு வங்கியை உறுதிப்படுத்தாத விசிகவை கூட்டணியில் வைத்திருப்பது தான் நமது கட்சியின் சாதனை.
இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள தோ்தல் அங்கீகாரத்தை உயிா்நீத்த விசிக தொண்டா்களுக்கு சமா்ப்பிக்கிறேன் என்றாா் அவா்.