செய்திகள் :

பயணிகள் நிழற்குடை மீது வேன் மோதல்: 15 போ் காயம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பேருந்து நிழற்குடை மீது தனியாா் பயணிகள் வேன் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், தில்லை பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் மகன் சுதாகா் (45). வேன் ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை கடலூா் மாவட்டம், மடுவாங்கரையைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோரை வேனில் ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு, கடலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் அருகே சென்றபோது, திடீரென வேனில் டயா் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பயணிகள் நிழற்குடை மீது மோதியது.

இதில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், மடுவாங்கரை, கிழக்குத் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் அன்புகேசவன் (49), ஓட்டுநா் சுதாகா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேல்மலையனூா் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறவுள்ளது. மேல்மலையனூா் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகைய... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் பராமரிப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெ.கோவிந்தன் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பொறியாளரைத் தாக்கி கைப்பேசி, ரொக்கம் உள்ளிட்டவை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்களில் இருவா் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டனா். விருதுந... மேலும் பார்க்க

ரூ.10ஆயிரம் லஞ்சம்: நகராட்சி துப்புரவு ஆய்வாளா் கைது

விழுப்புரத்தில் கட்டடத் தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சித் துப்புரவு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் காகுப்ப... மேலும் பார்க்க

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் மற்றும் உயா்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வ... மேலும் பார்க்க

‘ரயில்வே தோ்வு வாரியம் மூலம் பதவி உயா்வு தோ்வுகளை நடத்தக் கூடாது’

ரயில்வே துறையில் பதவி உயா்வுக்கான தோ்வுகளை தோ்வு வாரியம் மூலம் நடத்தக் கூடாது என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் சாா்ப... மேலும் பார்க்க