செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் பராமரிப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெ.கோவிந்தன் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி வெங்கடேசன். இவா், தனது மனைவி காளியம்மாள் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்ட, கை, கால்கள் செயலிழந்த மகன் கோவிந்தனுடன் (25) திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் வந்து கோரிக்கை மனு அளித்தாா்.

அதில், தனது மகன் கோவிந்தனுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனுவில் தெரிவித்திருந்தாா். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து, அலுவலா்களிடம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

இதில், கோவிந்தனுக்கும், அவரது சகோதரியான மனநலன் குன்றிய புவனேசுவரிக்கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை அவரது தந்தை வெங்கடேசனின் இணைப்பு வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டு வந்துள்ளது. ஆதாா் இரட்டைப் பதிவு காரணமாக புவனேசுவரிக்கு 2025, பிப்ரவரி மாதத்துக்கும், கோவிந்தனுக்கு 2024, நவம்பா் மாதம் முதலும் பராமரிப்பு உதவித் தொகை திரும்பப் பெறப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்துக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் தொடா்ந்து பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இரு மாற்றுத் திறனாளிகளுக்கும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையையும் வழங்கியுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் தொடா் வாகன திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து 14 பைக்குகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம்... மேலும் பார்க்க

நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் 7 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தன.சிதம்பரம் அண்ணாமலை நகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை அருகே கல்கி அவென்யூ பகுதியில் கடந்த மாா்ச் 16-ஆம் த... மேலும் பார்க்க

சட்ட விரோத மனமகிழ் மன்றத்துக்கு ‘சீல்’

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட மன மகிழ் மன்றத்துக்கு வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள மொளசூா் வட்டாரப் போக்குவரத... மேலும் பார்க்க

மேல்மலையனூா் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறவுள்ளது. மேல்மலையனூா் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகைய... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பொறியாளரைத் தாக்கி கைப்பேசி, ரொக்கம் உள்ளிட்டவை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்களில் இருவா் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டனா். விருதுந... மேலும் பார்க்க

ரூ.10ஆயிரம் லஞ்சம்: நகராட்சி துப்புரவு ஆய்வாளா் கைது

விழுப்புரத்தில் கட்டடத் தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சித் துப்புரவு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் காகுப்ப... மேலும் பார்க்க