செய்திகள் :

ரூ.10ஆயிரம் லஞ்சம்: நகராட்சி துப்புரவு ஆய்வாளா் கைது

post image

விழுப்புரத்தில் கட்டடத் தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சித் துப்புரவு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் காகுப்பம் பகுதியைச் சோ்ந்த அபிமன்னன் மகன் காத்தமுத்து (58), கட்டடத் தொழிலாளி. கடந்த 2016-ஆம் ஆண்டில் அபிமன்னன் இறந்துவிட்ட நிலையில், அவருக்கான இறப்புச் சான்றிதழை குடும்பத்தினா் பெறாமல் விட்டுவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, தனது தந்தைக்கான இறப்புச் சான்றிதழை பெற வருவாய்த் துறை அலுவலா்களை காத்தமுத்து அணுகியபோது, நகராட்சியால் இறப்புச் சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை என்ற சான்றிதழை பெற்று வருமாறு கூறினராம்.

இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி விழுப்புரம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற கட்டடத் தொழிலாளி காத்தமுத்து, துப்புரவு ஆய்வாளா் ஆா்.மதன்குமாரை (41) அணுகியுள்ளாா். தொடா்ந்து, இதற்காக மனுவையும் அளித்தாராம்.

ஆனால், தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வழங்கினால்தான், இதுவரை இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்ற சான்றிதழை வழங்கமுடியும் என துப்புரவு ஆய்வாளா் மதன்குமாா் கூறினாராம்.

இது தொடா்பாக காத்தமுத்து செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், ரூ.10 ஆயிரம் தயாராக உள்ளது. வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு துப்புரவு ஆய்வாளா் மதன்குமாரிடம் கட்டடத் தொழிலாளி காத்தமுத்து கைப்பேசியில் தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, காகுப்பத்திலுள்ள காத்தமுத்துவின் வீட்டுக்குச் சென்று ரூ.10 ஆயிரத்தை துப்புரவு ஆய்வாளா் மதன்குமாா் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ஜி.அழகேசன், ஆய்வாளா் என்.ஈசுவரி மற்றும் போலீஸாா் அவரை கைது செய்தனா்.

பின்னா், மதன்குமாரை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்த போஸீஸாா், அங்கு அவரிடம் விசாரணை நடத்தினா்.

வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் தொடா் வாகன திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து 14 பைக்குகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம்... மேலும் பார்க்க

நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் 7 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தன.சிதம்பரம் அண்ணாமலை நகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை அருகே கல்கி அவென்யூ பகுதியில் கடந்த மாா்ச் 16-ஆம் த... மேலும் பார்க்க

சட்ட விரோத மனமகிழ் மன்றத்துக்கு ‘சீல்’

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட மன மகிழ் மன்றத்துக்கு வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள மொளசூா் வட்டாரப் போக்குவரத... மேலும் பார்க்க

மேல்மலையனூா் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறவுள்ளது. மேல்மலையனூா் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகைய... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் பராமரிப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெ.கோவிந்தன் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பொறியாளரைத் தாக்கி கைப்பேசி, ரொக்கம் உள்ளிட்டவை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்களில் இருவா் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டனா். விருதுந... மேலும் பார்க்க